இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
தமிழிசை
வெந்தழல் நீராகும்; வெள்ளெலும்பு பெண்ணாகும்;
வந்தமத வேழம் வணங்கிடுமே - சந்தமெழப்
பாடுவார் உள்ளுருகப் பாடும் தமிழிசைக்கு
நீடுலகில் உண்டோ நிகர்!
தமிழிசைச் சங்கம்
ஆதி பகவன் அறவாழி அந்தணன்
யாதும் உவமையிலான் இன்னருளால் -- பூதலத்தில்
எங்கும் புகழ்பெற் நினிய தமிழிசைச்
சங்கம் வளர்க தழைத்து.
வேதப் பரியான் விரிசடையான் கங்காள
நாதன் நடராஜன் நல்லருளால் - பூதலத்தில்
பொங்கு புகழ்பெற்றுப் பொலிந்து தமிழிசைச்
சங்கம் வளர்க தழைத்து.
- கவிமணி