இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எண்ணுறும் போது தமிழையே யெண்ணிர்;
- இசைத்துழி தமிழையே பிசைப்பீர்;
பண்ணுறும் போது தமிழ்ப்பணி தனையே
- பழுதறப் பண்ணியின் புறுவிர்;
உண்ணுறும் போதும் உறங்கிடும் போதும்,
- உயிருளந் துடித்திடும் போதும்,
கண்ணினு மரிய தமிழையே கருதிக்
- காரிய வுறுதிகொண் டெழுவிர்!
எந்தாய் வாழ்க
சுத்தானந்த பாரதி