பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 15 அப்பொழுது பரமசிவன் கழுத்திலே நின்ற அந்த விஷம்தான் அந்த உருண்டைதான் இன்றைக்கு உலகத்திலே பிறக்கின்ற அத்தனை ஆண்களுக்கும் கழுத்துக்குக் கீழே இருக்கிற உருண்டையாம். உருண்டை யைத் தடவிப் பார்த்துக்கொள்ளுங்கள் இருக்கிறதா? இல்லையா? என்று. மறு உதயம் இப்படிப்பட்ட கதைகளை நம்பிக் கிடந்த இளைஞர் சமுதாயத்திற்கு முன்னால், அந்தக் கிழச்சிங்கம், இந்தப் புராணங்களை நம்புகிறாயா ? என்று கேட்டு, அதைக் கிழித்தெறிந்த காட்சியைக் கண்டு, அவர்களுடைய பட்டாளத்திலே சேர்ந்தவன் சின்னப் பையனாக இருந்த போது இந்தக் கருணாநிதி ! அந்த இளைய தலைமுறை -மீண்டும் உதயமாக வேண்டும். அந்த இளைய தலைமுறை - இன்றைக்கு வயதானவர்களாக பெரியவர்களாக மாறிப்போய் விட்டார்கள். துணிவு ஈரோட்டு மண்ணில் நான் பல ஆண்டுக்காலம் உலவி இருக்கின்றேன் என்றாலும், தந்தை பெரியார் அவர் களுடைய பயிற்சிப் பள்ளியில்-அவருடைய அலுவலகத் திலே பணியாற்றுகின்ற வாய்ப்பைப் பெற்று ஏறத்தாழ இரண்டாண்டுக் காலம் அவரோடு குடியரசு அலுவலத்தில் அவருடைய மாளிகையில், அவருக்கு அருகில் அமர்ந்து உண்ணுகின்ற வாய்ப்பைப் பெற்று-அவர் தருகின்ற ஊதியத்தைப் பெற்று - அவர் நடத்திய குடிஅரசுப் பத்திரிகையின் துணையாசிரியன் என்கின்ற பொறுப்பைப் பெற்று-பயின்றவன் - பகுத்தறிவு பெற்றவன்- என்னு டைய நண்பர்கள் எல்லாம் அடிக்கடி சொல்லுவது போல துணிவை அவரிடத்திலே இருந்து பெற்றவன். கனிவை காஞ்சிபுரத்திலே இருந்து பெற்றவன்.