பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைப் புரட்சி 16 அந்த வகையிலே பெரியார் பிறந்த இந்த மண்ணில் அமைந்திருக்கின்ற இந்தக் கல்லூரியினுடைய குழுவிலே ஒரு காலத்திலே தந்தை பெரியார் அவர்களே கூட உறுப்பினராக இருந்து இந்தக் கல்லூரியினுடைய உயர்வுக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்டு இருக்கின்றார் அப்படிப்பட்ட பெரும் தலைவர்-உண்மையிலேயே ய புரட்சி செய்த தலைவர்-சமுதாயத்திலே அரசியலிலே பெரும் புரட்சியை உருவாக்கிய தலைவர் - அந்தத் தலைவருடைய காலடிப்பட்டமண் ; அந்தத் தலைவருடைய குரல் ஒலித்த மண் ; அந்தத் தலைவர் பிறந்த மண்- அந்த மண்ணிலே நின்று கொண்டு நான் உங்களுக்குச் சொல்லுகின்ற செய்தி, சமுதாயத்திலே நாம் எந்த அளவுக்குத் தாழ்ந்து கிடக்கிறோம் என்பதை எண்ணிப் பாருங்கள். இதுதான், இந்த மாணவர் பேரவையினுடைய திறப்பு விழாவில் உங்களுக்கு நான் தருகின்ற மிக முக்கிய மான செய்தியாக இருக்க முடியும். அடித்தளம் சீர்திருத்தம் தாழ்ந்து, தாழ்ந்து, தாழ்ந்து போய்விட்ட ஒரு சமுதாயத்தை தலைநிமிர்த்துகின்ற பெரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்தான் தந்தை பெரியார் ஆவார்கள். அவர்கள் பொருளாதாரம் என்பது பொன்மயமான ஒரு மாளிகையாகக்கூட இருக்கலாம். அரசியல் என்பது. அந்த பொன் மாளிகையின் மீது அமைக்கப்பட்ட வைரம் பதித்த கலசங்களாகக் இருக்கலாம். ஆனால், பொருளாதாரம் என்கின்ற மாளிகைக்கு -அதன் மீது அழகு ஒளியைச் கூட பொன் சிந்திக் கொண்டிருக்கின்ற வைரக் கலசங்களுக்குப் பாதுகாப்பும்