பக்கம்:தமிழின எழுச்சி.pdf/121

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

120 • தமிழின எழுச்சி

முயற்சிகள் எத்துணைப் பொருள்வலிவு, அரசஅதிகாரவலிவு படைத்தன வாயினும் என்றைக்கும் தோல்வியடைந்தே தீரும். வெறும் மேற்பூச்சு மருந்துகளாலும், இதுபோலும் பொம்மை நாடகங்களாலும், மெலுக்குப் பேச்சுகளாலும் ஏற்படும் பார்ப்னீயத் தீமை பெரிதன்று, இவ்வகைப் போலி முயற்சிகளால் இவர்கள் எவ்வகை புராண, இதிகாசங்களை நிலைநிறுத்தப் பார்க்கின்றனரோ அவற்றையே ஒழித்தால்தான் தமிழர்களின் வாழ்க்கை ஒளி பெறும், அடிமைநிலை மாறும்; துயரங்கள் தீரும்.

இறுதியாக மகாலிங்கங்களுக்கும் ஒரு சொல். இதுபோல் உப்புச் சப்பற்ற முயற்சிகளில் ஈடுபடுத்த உங்களைப் போலும் பல செல்வர்கள் பயன்படலாம். இதனால் எல்லாம் உங்களுக்கு ஊதியம் வரலாம்; பேரும் புகழும் இடைக்காலத்தில் கிடைக்கலாம். ஆனால் நீங்கள் செய்யும் இன அழிவு முயற்சிகளை இந்தத் தமிழகம் என்றைக்கும் மறக்காது; மறைக்காது; என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தமிழர்கள் இதுபோலும் இன அழிவு முயற்சிகளில் ஏமாளிகளாக இல்லாமல், எச்சரிக்கையாக இருப்பார்களாக.

தென்மொழி சுவடி-15, ஓலை-8 பெப்-மார்ச்சு 1979