பக்கம்:தமிழின எழுச்சி.pdf/76

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 75

போரிட்டுக் கொண்டிருப்பவர்களாக நாம் இருக்கின்றோம். இனி, தமிழன் என்று ஓர் இனம் இருக்கின்றதா என்று ஐயப்பட்டு அதை நிலை நாட்டுகின்ற ஒரு கருத்தரங்கு நடந்தாலும் நடக்கும். “தமிழன் பிறந்தகம் குமரிக்கண்டமா” என்கின்ற கருத்தரங்கு நடைபெறுகின்ற நிலைபோல், தமிழன் என்று ஒருவன் இருக்கின்றானா என்று ஆய்வு செய்யக்கூடிய நிலைக்கே நாம் வந்தாலும் வருவோம். இதையெல்லாம் ஒட்டு மொத்தமாக எண்ணிப் பார்க்கின்ற பொழுது, தமிழன் தன்னுடைய பெருமையை மறந்துவிட்டு எவ்வளவு கீழ்த்தரமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றான் என்று கருதி வருந்த வேண்டியுள்ளது.

இது தொடர்பாகக் காலையிலிருந்து மாலை வரை பேசிய கருத்துரைகள் முடிய, அருமையான விளக்கங்களை - இவற்றைவிட வேறு விளக்கங்கள் தேவையே இல்லையென்று சொல்லுமளவிற்கு - அறிஞர்கள் பலரும் நமக்குத் தந்தார்கள். இருந்தாலும் கூட, இந்த விளக்கங்கள். பாவாணர் அவர்கள் நினைத்துக்கொண்டு இருப்பதுபோல, இனிமேல் உலக முழுவதும் ஏற்றுக் கொள்ளும் முடிவான விளக்கங்கள் என்று கொள்வதற்கில்லை. இன்னும் பல நூல்கள் நாளுக்குநாள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இன்னும் பல கருத்துகளை நாள்தொறும் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட கருத்துகளை யெல்லாம் அப்பொழுதைக்கப்பொழுது நாம் மறுத்துக் கொண்டே யிருக்க வேண்டும் என்ற நிலை இருக்குமே தவிர, இந்தப் போராட்டத்திற்கு முடிவே இருக்காது, எனவேதான் இத்தகைய நிலைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருக்கும்படியான ஒரு நிலைக்கு நாம் வந்தாலொழிய வேறு எந்தப் பயனும் இவ்வகைக் கருத்தரங்குகளால் ஏற்படவே போவதில்லை.

இனி, பாவாணர் அவர்களுக்குச் சொல்லிக் கொள்கின்றேன். இந்தக் கருத்துகளை இனி, ஒரு கருத்தரங்கப் போராட்டமாக நடத்திக் கொண்டிருக்க வேண்டுவதில்லை. இந்தக் கருத்துப் போராட்டம் வேண்டுமானால் அறிஞர்கள் அளவிலே நிகழ்ந்து கொண்டிருக்கட்டும், ஆனால் நம்மைப் போன்ற இளைஞர்கள்? நமக்கு இருக்க வேண்டிய உரிமைகளை நாமே பெற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இளைஞர்களும் சேர்ந்து வாயளவிலே, அல்லது நூலளவிலே இத்தகைய கருத்துகளுக்காகச் சொற்போராட்டங்கள் நிகழ்த்திக் கொண்டிருப்பது, நம் ஆற்றல்களையும் காலத்தையும் வீணடிக்கின்ற செயலாகவே எனக் குப் படுகின்றது. எனவேதான் என்னுடைய நோக்கும், போக்கும் வேறு அளவிலே, விரைவிலே இதற்கு ஏதாவது ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும்; தமிழகத்தை எப்படியாகிலும் வடநாட்டார் ஆளுகை