பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

தமிழியக்கம்

பிரம்புவளை மெய்யுடையீர்
    ஆருயிரில் வாரியிட்டுப்
        பிசைந்த தான
உரம்பெய்த செந்தமிழுக்
    கொன்றிங்கு நேர்ந்ததென
        உரைக்கக் கேட்டால்
நரம்பெல்லாம் இரும்பாகி
    நனவெல்லாம் உணர்வாகி
        நண்ணி டீரோ!
இரங்குநிலை கொண்டதமிழ்
    ஏற்றகுறை தவிர்த்திடநீர்
       எழுச்சி கொள்வீர். 19

அன்னையினை எதிர்த்தார்க்கும்
    அவள்மேன்மை மறந்தார்க்கும்
        அயர்ந்த வர்க்கும்
மின்னைவிழி உயர்ந்ததுபோல்
    மெய்யுயிரைப் பெற்றதுபோல்
        தமிழ்ச்சாப் பாடு
தன்னையுணர் விப்பதற்குச்
    சாரைச்சிற் றெறும்பென்னத்
        தமிழ் நாட்டீரே,
முன்னைவைத்து காலைப்பின்
    வையாமே வரிசையுற
       முடுகு வீரே! 20