பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

தமிழியக்கம்

வடமொழியும் தெரியும் எனப்
   பொய் கூறி வடமொழிக்கு
        வாய்ப்பும் நல்க
வடமொழியா னைக் கொண்டு
    மொழி பெயர்த்து வருவார்க்கு
        வண்ட மிழ்ச்சீர்
கெடுவதிலே கவலையில்லை.
    ஆரியரை ஆதரித்துக்
        கிடப்ப தொன்றே
நடை முறையில் நலன் விளைக்கும்
    என்னு மொரு மடமையினை
        நசுக்க வேண்டும். 49

அரசினரின் மொழியாக,
     அரசியலார் மொழியாக,
         அரசியல் சார்
வரிசையுறு சட்டமன்றின்
     மொழியாக, வையம் அறி
         மொழிய தாகத்
திருமலிந்த தமிழ் மொழிதான்
     ஆகும்வகை நம்புலவர்
         சேர்ந்து தொண்டு
புரிக என வேண்டுகின்றோம்
     பொழிக என வேண்டுகின்றோம்
         பொன்ம ழைதான்!50