பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவி சிந்தனைச் செம்மல்; சொல்லேருழவர்; தமிழுணர்வுப் பொய்கை: இனவுணர்வுப் பூக்காடு: வரலாற்றறிபுலம்; பல்துறைக் கருவூலம். இக்கருவூலக் கொள்கலனிலிருந்து தமிழகம் பெற்ற அணிகலன்கள் 17 நூல்கள், 350 கட்டுரைகள். கருவூலம் வழங்கிய ஆய்வுலக உரைகற்களாக பதினான்கு முனைவர்கள் (Ph.D.) இருபதுக்கு மேற்பட்ட ஆய்வியல் நிறைஞர்கள் (M.Phil.). சஞ்சீவிப் பெருமுகட்டிலிருந்து சிதறிய சிறுகற்கள் சிலவற்றின் பெட்டகமே இந்நூல்.