பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ரா. பி.சே. பற்றித் திரு. வி. க. வின் இரத்தினச் சுருக்கமான சொல்லோவியம் ஒன்று உள்ளது. அதுவருமாறு : * தமிழ் கொழிக்கும் பொருநைக் கரையில் பிறந்து, தமிழ் பொங்கும் பொதிகைத் தென்றலில் வளர்ந்து, தமிழார்ந்த மனமொழி மெய்களைப்பெற்றுத் தமிழ் வண்ணமாய்த் தமிழ் பொழியும் ஒரு பெருங் கொண்ட லிடை உதித்த மின்னொளி இந்நூல். வரதராசனார் வாலாஜா, இராணிப்பேட்டை, வேலூர், வெட்டு வானம் முதலிய இடங்கட்கு யான் அடிக்கடி செல்வேன். கூட்டங்களில் யான் மு. வரதராஜனாரைப் பார்ப்பேன். அவர் என்னைக் கண்டதும் ஒதுங்கி ஒதுங்கி நிற்பார். பின்னே நாங்கள் நெருங்கிப் பழகினோம். வரதராஜனார் முக அமைப்பு என் மூளைக்கு வேலை அளித்தது. அதைச் சிந்திக்கச் சிந்திக்க என் மூளை அவர் மூளையை நண்ணியது. நுண்ணறிவுக்கேற்ற முகம் வடிந்திருக்கிறது என்ற முடிவுக்கு வந்தேன். முதல் முதல் வரதராஜனார் பேச்சை யான் வெட்டு வானத்தில் கேட்டேன்: அப்பேச்சு அவர் முக அமைப்பைப் பற்றி யான் கொண்ட முடிவை உறுதிப் படுத்தியது. அவரது எழுத்தும் பேச்சைப் போலவே இருத்தல் கண்டேன். வரதராஜனார் பேச்சிலும் எழுத்திலும் பர்னாட் ஷாவின் கருத்துக்கள் ஆங்காங்கே பொலியும். அவர் பர்னாட்ஷா நூல்களைப் படித்துப்படித்து ஒரு தமிழ் பர்னாட்ஷா ஆனார் என்று கூறுதல் மிகையாகாது. பர்னாட்ஷாவைப் பார்க்கிலும் வரதராஜனார் ஒரு துறையில் சிறந்து விளங்குகிறார் என்பது எனது ஊகம். பர்னார்ட்ஷா பலப்பல நூல்களை எழுதி எழுதி முதுமை எய்தியவர். இம்முதுமையில் அவர்க்கு வழங்கும் இக்கால அரக்கப் போர்க்கட்சி வாழ்க்கைக் குக் கிறிஸ்து வேண்டும்; பைபிள் வேண்டும்’ என்னும் எண்ணத்தை அவரிடம் அரும்பச்செய்து வருகிறது. வரதராஜனார்க்கோ அக்கருத்து இளமையிலேயே முகிழ்த்தது. வாழ்க்கைக்குச் சமயம் தேவை; கடவுள்