கயிறு
'பெருங் கயிறு நாலும் இரும் பனம்
பிணையல்' (நற்.90: 6)
(2) அடக்குதல் - control
'வல்லோன் அடங்கு கயிறு
அமைப்ப' (அகம்.224: 2)
(3) காப்பு - safety
'பெருங் கயிற்று ஒழுகை மருங்கில்
காப்ப' (பெரும் 63)
(4) கட்டு - tie
'விசி' வீங்கு இன் இயம் கடுப்பக்
கயிறு பிணித்து' (பெரும்.56)
(5) நேர்நிலை | நுட்பம் - straight,
minute
நூல் அறி புலவர் நுண்ணிதின்
கயிறு இட்டு, தேஎம் கொண்டு,
தெய்வம் நோக்கி, பெரும்பெயர்
மன்னர்க்கு ஒப்ப மனைவகுத்து'
(நெடு.76-78)
(6) பிணிப்பு - bind
'பருவத்தோடு ஒட்ட ஒழுகல்
திருவினைத் தீராமை ஆர்க்கும்
கயிறு' (குறள்.482)
(7) உணர்வு - emotion
'உறவு கோல்நட்டு உணர்வு
கயிற்றினால் முறுக வாங்கிக்
கடைய முன்நிற்குமே'
(திருநா.தேவா.30: 3-4)
(8) சொல் (வாக்கு) - word / speech
'வாள் தடங்கண்ணி நல்லாள்
வாக்கெனும் தூக்கயிற்றால் பூட்டுபு
கொள்ளப்பட்டான்' (நீலகேசி.265:
3-4)
(ஆ) தாம்பு Tampu
(9) பிணித்தல் - bind
'தீம்பால் கறந்த கலம்மாற்றி,
கன்று எல்லாம் தாம்பின்
பிணித்து ' (கலி.111: 1-2)
(இ) ஞாண் Nan
(10) நுட்பம் - fineness
'நுண்ஞாண் வலையிற் பரதவர்
போத்தந்த பன்மீன் உணங்கல்
கவரும் துறைவனை ' (ஐந்.எழு.64:
1-2)
(ஒப்பு) Rope இணைப்பு, ஏறுதல்,
கட்டுதல், கழிவிரக்கம்; தடை,
நம்பிக்கை இழப்பு.
கரும்பு
கரடி (bear) பார். 'எண்கு '
கரந்தை Karantai (a flower)
(1) வீரம் - bold.
'தறுக ணாளர் நல் இசை நிறுமார்,
.. .. .. .. - செம்பூங் கரந்தை
புனைந்த கண்ணி வரிவண்டு
ஆர்ப்பச் சூட்டி ' (அகம்.269: 5-12)
(2) நிரை கொள்ளல் - a war,
confiscating cattle -
'முருந்தேர் இளநகை காணாய்
நின்னையர் கரந்தை அலறக்
கவர்ந்த இனநிரைகள்' (சிலப். 12:
16)
(3) நறுமணம் - fragrance
'நளிரும் மலர்க் கொன்றையும் நாறு
கரந்தை ' (திருஞான.தேவா. 1687: 1)
கரி (charcoal) பார். 'இருந்தை',
'கந்துள்'
கருடன் (eagle) பார். 'பருந்து'
கருப்பூரம் Karuppuram
(1) நறுமணம் - fragrance
'கருப்பூரம் நாறுமோ கமலப்பூ
நாறுமோ ' (நாலா.567: 1)
(ஆ) பளிதம் Palitam
நறுமணம் - fragrance
'பளித நாறு மேனியன்'
(சூளா .1371: 4)
கரும்பு Karumpu (sugarcane)
(1) இனிமை - sweet
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக்
கரும்பின்' (குறு.85: 4)
(2) வளமை - prosperity
'பூத்த கரும்பின் காய்த்த நெல்லின்
கழனி ஊரன் மார்பு' (ஐங்.4: 4-5)
(3) பயன் - use
'ஆலைக்கு அலமரும், தீம் கழைக்
கரும்பே ' (மலை .119)
(4) கீழ்மை - mean, low
சொல்லப் பயன்படுவர் சான்றோர்
கரும்பு போல் கொல்லப் பயன்படும்
கீழ்' (குறள்.1078)