கூடம்
கூடம் (சுத்தியல்) Kitam (hammer)
(1) ஆற்றல் - strong
'இரும்புபயன் படுக்கும் கருங்கைக்
கொல்லன் விசைத்து எறி
கூடமொடு பொரூஉம் உலைக் கல்
அன்ன, வல்லாளன்னே'
(புறம்.170: 15-17)
(2) வலிமை - strength
'கருங் கைக் கொல்லன் இரும்பு
விசைத்து எறிந்த கூடத் திண்
இசை வெரீஇ' (பெரும்.437-438)
(ஒப்பு) Hammer ஆற்றல்,
உழைப்பு, கருமான், நிலைபேறு,
படைப்பு, மீட்பு, வளமை, விதி,
வலிமை, பொதுவுடைச் சின்னம்;
அழிவு, பழிதீர்வு.
கூடல் Kital (a city)
(1) சிறப்பு, உயர்வு, மேன்மை
'பணிவு இல் உயர் சிறப்பின்
பஞ்சவன் கூடல்' (பரி.தி.2: 46)
(2) அழகு
'உருகெழு கூடலவரோடு, வையை'
(பரி.தி.2: 91)
(3) தமிழ்
'தமிழ்கெழு கூடல் தண்கோல்
வேந்தே ' (புறம்.58: 13)
(4) புகழ்
'மாடம் பிறங்கிய மலிபுகழ்க்
கூடல்' (மது.429)
(ஆ) மதுரை
புகழ் - fame
'தண் தமிழ் வேலித்
தமிழ்நாட்டகம் எல்லாம் நின்று
நிலை இப் புகழ் பூத்தல் அல்லது,
குன்றுதல் உண்டோ மதுரை'
(பரி.தி.9:1-3)
(5) செல்வம் - wealth
'கார்த்திகை காதில் கன மகர
குண்டலம் போல், சீர்த்து
விளங்கித் திருப்பூத்தல் அல்லது.
கோத்தை உண்டாகுமோ மதுரை'
(பரி.தி.11: 1-3)
(6) வளமை - prosperous
'வண்ணம் நீவிய வணங்கு இறைப்
பணைத்தோள், ஒள் நுதல்,
விறலியர் பூவிலை பெறுக! என.
கூந்தல்
மாட மதுரையும் தருகுவன்'
(புறம்.32:3-5).
(7) தமிழ் | மகிழ்ச்சி | இன்பம் -
tamil / happiness / joy
'தமிழ் நிலை பெற்ற, தாங்கு அரு
மரபின் மகிழ்நனை, மறுகின்
மதுரையும் வறிதே' (சிறு.66-67)
கூத்தன் Kittan (actor)
(1) உயிர் - life / soul
தோற்பையுள் நின்று தொழிலறச்
செய்தூட்டும் கூத்தன் புறப்பட்டக்
கால்' (நாலடி.26)
கூதளம் Kutalam (a plant)
(1) கூதிர்காலம், நறுமணம் - winter,
fragrance
'கூதிர்க் கூதளத்து அலரி நாறும்'
(நற்.244: 2)
(2) குளிர்ச்சி - cool
'வெண் கூதாளத்துத் தண்பூங்
கோதையர்' (பட்,85)
கூந்தல் Kintal (tresses / hair)
(1) இன்பம் - pleasure
'அரிசில் அம் தண் அறல் அன்ன,
இவள் விரி ஒலி கூந்தல் விட்டு
அமைகலனே ' (நற்.141: 11-12)
(2) புணர்வு
'செய்வினை முடித்த செம்மல்
உள்ளமொடு இவளின் மேவினம்
ஆகி, குவளைக் குறுந்தாள்
நாள்மலர் நாறும் நறுமென் கூந்தல்
மெல் அணையேமே' (குறு.270: 5-8)
(3) வளமை
'புதல் மிசை நறு மலர் கவின்
பெறத் தொடரி, நின் நலம்மிகு
கூந்தல் தகை கொளப் புனைய
வாராது அமையலோ இலரே!'
(ஐங்.463: 1-3)
(4) அழகு
'ஆய் நுதல், அணி கூந்தல்,
அம்பணைத் தடமென்தோள்'
(கலி.40: 8)
(5) அன்பு | இன்பம்
'கோல் திரள் முன் கைக் குறுந்
தொடி மகளிர் நாறு இருங் கூந்தல்
கிழவரைப் படர்ந்தே '
(புறம். 113: 8-9)
113