சடை
நீர் அணங்கு ஒளிவளை நிரந்து
விம்மின' (சூளா, 72: 1-3)
(ஈ) வரி சங்கம் நின்று ஊதுதல்
Vari cankam ninru ututal
(6) திருமணம்
'மத்தளம் கொட்ட வரி சங்கம்
நின்று ஊத .. .. .. கனாக்
கண்டேன்' (நாலா,561)
சடை Catai (matted hair)
(1) துறவு (வேடம்) - penance, feign
'சடையினர் உடையினர் சாம்பல்
பூச்சினர்' (சிலப்.26; 225)
சமண குருமார்களின் கையிலிருந்து
மயிற்பீலி, தடுக்கு, பாய்
ஆகியன நழுவி வீழ்தல்
Camana kurumarkalin kaiyiliruntu
mayirpili, tatukku, pay akiyana
naluvi viltal
(1) தீமை, அழிவு - harm, destruction
'பீலியும் தடுக்கும் பாயும்
பிடித்தகை வழுவி வீழ .. .. ..
மேல்வரும் அழிவுக்காக வேறு
காரணமும் காணார்' (பெரிய.2536:
1-6)
சரவணம் Caravanam (a pond)
(1) புனிதம், சிறப்பு, கடவுட்டன்மை -
holy, divine
'விண்ணோர் ஏத்தும் வியத்தகு
மரபில் புண்ணிய சரவணம்
பவகாரணியோடு இட்ட சித்தி
எனும் பெயர் போகி' (சிலப். 11:
93-95)
சலாகை (நன்மணி) Calakai
(1) சிறப்பு
'சேயிருங் குன்றம் ஈன்ற
செழுமணீச் சலாகை போல்வாள்'
(சூளா ,984: 4)
சனி Cani (Saturn)
(1) துன்பம் - suffering
'சனியான தமிழை விட்டுத்
தையலார்தம் இடமிருந்து
சாறு கொள் ஊர்
தூதுசென்று பிழைத்தோமில்லை'
(தனிப்.493: 6-7)
(2) கொடுமை - cruel
'வியந்த நிசாசரனாம் என்று
சந்திரனும் வெஞ்சனிக்குப்
பயந்தவனாம் என்றூ பானுவும்
வந்து பணிய' (தனிப்.646: 1-2)
சாகாடு Cakatu (cart)
(1) வாழ்க்கை | பயணம் - life /
journey -
'கள் கொண்டு மறுகும் சாகாடு
அளற்று உறின்' (அகம்.116: 3)
(2) உலகம் ஆளும் முறை,
ஆட்சித்திறம், இயக்கம் - reign,
ruling, movement
'கால் பர் கோத்து, ஞாலத்து
இயக்கும் காவற்சாகா
டுகைப்போன் மாணின், ஊறு
இன்றாகி ஆறு இனிது படுமே;
உய்த்தல் தேற்றான் ஆயின்,
வைகலும், பகைக் கூழ் அள்ளற்
பட்டு, மிகப் பல் தீ நோய்
தலைத்தலைத் தருமே' (புறம்.185)
(3) உடம்பு - body
'பண்டம் அறியார் படுசாந்தும்
கோதையும் கண்டு பாராட்டுவார்
கண்டிலர்கொல் மண்டிப்
பெடைச்சேவல் வன்கழுகு
பேர்த்திட்டுக் குத்தும்
முடைச்சாகாடு அச்சிற்று உழி'
(நாலடி.48)
சாம்பற்பூச்சு Camparpuccu
(1) துறவு (வேடம்) - disguise
'சடையினர் உடையினர் சாம்பல்
பூச்சினர்' (சிலப்.26: 225)
சாரிகை (நாகணவாய்ப்பறவை) Carikai
(1) மென்மை
'தண்ணென் சோலை எம்மருங்கும்
சாரும் மடமென் சாரிகையின்' -
(பெரிய. 1024: 5-6)
சாறு கொள் ஊர் Caru kol ur (festive
town)
(1) பொலிவு, மகிழ்ச்சி - bright,
gladness
126