திமில்
(12) துணை, உதவி, பாதுகாப்பு -
Support, help, protection
'நெடுநீர் புணையின்றி நீந்துதல்
இன்னா' (இன்னா .3)
(13) கல்வியறிவு - knowledge
'மூப்பின்கண் நன்மைக்கு
அகன்றானும் கற்புடையாள்
பூப்பின்கண் சாராத் தலைமகனும்
- வாய்ப்பகையுள் சொல்வென்றி
வேண்டும் இலிங்கியும் இம்மூவர்
கல்விப் புணை கைவிட்டார்'
(திரி.17)
(ஈ) அம்பி Ampi
(14) அசைவு - move, oscillate
'பனைவெளிறு அருந்து பைங்கண்
யானை ஒண்சுடர் முதிரா
இளங்கதிர் அமையத்து,
கண்படுபாயல் கைஒடுங்கு
அசைநிலை வாள்வாய்ச் சுறவின்
பனித்துறை நீந்தி, நாள்வேட்டு
எழுந்த நயன் இல் பரதவர்
வைகுகடல் அம்பியின்
தோன்றும்' (அகம்.187: 18-23)
அறம் - moral, virtuous
'உறுவரும் சிறுவரும் ஊழ்மாறு
உய்க்கும் அறத்துறை அம்பியின்
மான' (புறம்.381: 23-24)
(உ) வெற்று யாற்று அம்பி Verru
yarru ampi
(15) பொலிவின்மை - gloomy
'அந்தோ! எந்தை அடையாப் பேர்
இல் வண்டு படு நறவின் தண்டா
மண்டையொடு வரையாப் பெருஞ்
சோற்று முரி வாய் முற்றம்,
வெற்று யாற்று அம்பியின் எற்று?
அற்று ஆகக் கண்டனென், மன்ற'
(புறம்.261:1-5)
(ஊ) கலம் Kalam
(16) பயணம் - voyage/ journey
'யவனர் தந்த வினைமாண்
நன்கலம் பொன்னொடு வந்து
கறியொடு பெயரும்' -
(அகம், 149:9-10)
(எ) ஆழ்கலம் Alkalam (sinking
ship)
திமில்
(17) துன்பம் - suffering
'நட்பு நார் அற்றன நல்லாரும்
அஃகினார் அற்புத் தளையும்
அவிழ்ந்தன - உட்காணாய்
வாழ்தலின் ஊதியம்
என்னுண்டாம்? வந்ததே
ஆழ்கலத்து அன்ன கலி'
(நாலடி.12)
(ஏ) ஆழ்கல மாந்தர் Alkala
mantar (people in sinking ship)
துன்பம் - affliction
'போழ்படப் பிளந்து வாளில்
புரட்டியிட் டரியக் கண்டே
ஆழ்கல மாந்தர் போல வணிநகர்
அழுங்கிற்றன்றே ' (சீவக. 1163: 3-4)
(ஐ) கடலில் கலம் கவிழ்தல்
Katalil kalam kaviltal (ship
sinking at sea)
துன்பம் - distress
'மறிகடலில் கலம் கவிழ்த்தார்
போல நின்றேன்' (பெரிய 2384: 2)
(ஓ) பண்டம் களை கலம் Pantam
kalai kalam (unloaded ship)
(18) வெறுமை - empty, desolate, bare
'கலிகெழு பண்டம் களை கலம்
போல வலிகெழு சிறப்பின்
மதிலுஞ் சேனை உள்ளகம்
வறுமை எய்திப் புல்லென'
(பெருங்.இலா.8: 123-125)
(ஓ) தோணி Toni
(19) துணை / உதவி - support / help
'ஏணியை இடர் கடலுள் கழிக்கப்
பட்டிங் கிளைக்கின்றேற்
கக்கரைக்கே ஏற வாங்கும்
தோணியைத் தொண்டனேன் தூய
சோதி' (திருநா. தேவா.739: 3-5)
(20) மீட்சி - rescue
'துன்பக் கடல் புக்கு வைகுந்தன்
என்பது ஓர் தோணி பெறாது
உழல்கின்றேன்' (நாலா.548: 3-4)
(ஔ) மயங்குகால் எடுத்த வங்கம்
(கடுங்காற்றினால் அலைக்கப்பட்ட
மரக்கலம்) Mayankukal etutta vankam
துன்பம்
153