பம்பை
ஆற்றல், போர்,
விண்ணுலகு, விளையாட்டுத் தனம்.
பம்பை Pampai (a drum)
(1) துன்பம் - affliction
பைதல் பம்பை இடங்கள் எருக்கி'
(பெருங். உஞ்.36: 159)
பயின் (பிசின்) Payin (gum)
(1) தகவின்மை - unworthy
'நயவார்கண் நல்குரவு நாணின்று
கொல்லோ பயவார்கண் செல்வம்
பரம்பப் பயின்கொல்
வியவாய்காண் வேற்கண்ணாய்
இவ்விரண்டும் ஆங்கே நயவாது
நிற்கு நிலை' (நாலடி.267)
பருத்தி Parutti (cotton)
(1) எளிமை - simple, easy
'பருத்தி வேலிச் சீறூர் மன்னன்'
(புறம்.299: 1)
(2) வேனிற்பருவம் - summer
'கோடைப் பருத்தி வீடுநிறை
பெய்த' (புறம்.393: 12)
பருந்து Paruntu (hawk)
(1) உயர்ச்சி - lofty, high
- ஈன் பருந்து உயவும் வான் பொரு
நெடுஞ்சினை ' (நற்.3: 1)
(2) பகை, வெற்றி - enimity, victory
'பருந்து வீழ்ந்து எடுத்த பைந்
தலை அரவம்' (ஐங்.தி.1: 2)
(3) திறன் - capability
'பருந்து எறிந்தற்றாக் கொள்ளும்'
(கலி.82: 27)
(4) போர் - war
'என்றூழ் நின்ற புன் தலை
வைப்பில், பருந்து இளைப்படூஉம்
பாறு தலை ஓமை'
(அகம்.21: 14-15)
(5) குறிதவறாமை - aim, target, purpose
'எறி பருந்து உயவும் என்றூழ் நீள்
இடை ' (அகம்.81:9)
(6) அழிவு - destroy
'உரைத்தவர் நாவோ பருந்தெறியா
தென்று சிலைத்தெழுந்து செம்மாப்
பவரே - மலைத்தால் இழைத்த
திகவா தவரைக் கனற்றிப்
பருந்து
பலிப்புறத் துண்பார் உணா'
(பழமொழி. 295)
(ஆ) கழுகு Kaluku (vulture)
(7) இறப்பு - death
'கருங்கட் காக்கையொடு கழுகு
விசும்பு அகவ, சிறு கண் யானை
ஆள் வீழ்த்துத் திரிதரும் நீள்
இடை அருஞ்சுரம் என்ப'
(ஐங்.314: 2-4) |
(8) விரைவு / வேகம் - fast, quick
'சேயொளிச் சிறையவேகக்
கழுகினுக்கு அரசு செய்வேம்'
(கம்ப.கிட் 991: 2)
(இ) உவணம் Uvanam (eagle)
(9) வலிமை - strong
'விடமுடை அரவின் உடல் உயிர்
உருங்கு உவணம்' (பரி.4: 42)
(10) உயர்வு - high, lofty
'வென்றி வேந்தரை வருக என்று
உவணம் வீற்றிருந்த பொன்
திணிந்த தோட்டு அரும் பெறல்
இலச்சினை போக்கி'
(கம்ப.அயோ ,72: 1-2)
வேகம்
'அஞ்சுவணத்தின் ஆடை
உடுத்தாள் அரவு எல்லாம்
அஞ்சுவணத்தின் வேகம்
மிகுந்தாள் அருள் இல்லாள்'
(கம்ப.சுந்.173: 1-2)
(ஈ) உவணக்கொடி Uvanakkoti
(11) உயர்வு | நிலைபேறு - lofty /
eternal, perpectual
'செவ்வாய் உவணத்து உயர்
கொடியோயே' (பரி.2: 60)
(உ) எருவை Eruvai
(12) கொடுமை - cruel
'அமர்க்கண் அமைந்த அவிர்
நிணப் பரப்பின் குழூஉச் சிறை
எருவை குருதி ஆர' (பதி.67: 8-9)
இறப்பு - death -
'குருதி ஆடிய புலவுநாறு
இருஞ்சிறை எருவைச் சேவல்
ஈண்டுகிளைத் தொழுதி பச்சூன்
கொள்ளை சாற்றி, பறைநிவந்து'
(அகம்.381:9-11)
191