அதர்
அதர் Atar (way)
(1) அச்சம், கொடுமை - fear,cruelty
'துவர்செய் ஆடைச் செந் தொடை
மறவர் அதர் பார்த்து அல்கும்
அஞ்சுவரு நெறியிடை' (நற்.33:6-7)
(2) மயக்கம் / குழப்பம் - confusion
'அயம்திகழ் நறுங் கொன்றை
அலங்கல் அம் தெரியலான்
இலங்கு எயில் எயப் பிறந்த
எரிபோல,எவ்வாயும்,கனைகதிர்
தெறுதலின்,கடுத்து எழுந்த
காம்புத் தீ மலை பரந்து தலைக்
கொண்டு முழங்கிய முழங்கு அழல்
மயங்கு அதர் மறுகலின், மலை
தலைக் கொண்டேன்'
(கலி.150:1-5)
(ஆ) கவலை Kavalai
(3) அரியதன்மை - rare
'ஏர் தரலுற்ற இயக்கு அருங்
கவலை' (நற்.79: 4)
(4) அச்சம் - fear
'பிறை மருள் வான் கோட்டு
அண்ணல் யானை,சினம் மிகு
முன்பின்,வாம் மான்,அஞ்சி
இனம் கொண்டு ஒளிக்கும்
அஞ்சுவரு கவலை'
(அகம்.115:13-15)
(5) மயக்கம் - confusion
'கடுவளி எடுத்த கால்கழி
தேக்கிலை நெடுவிளிப் பருந்தின்
வெறிஎழுந் தாங்கு, விசும்புகண்
புதையப் பாஅய், பலஉடன்
அகல்இடம் செல்லுநர்
அறிவுகெடத் தாஅய், கவலை
கரக்கும் காடு அகல் அத்தம்'
(அகம்.299:5-9)
(இ) ஆறு Aru
(6) கொடுமை, வெம்மை, துன்பம் -
cruelty, heat, suffering
'எறும்பி அளையின் குறும்பல்
சுனைய உலைக்கல் அன்ன பாறை
ஏறி,கொடுவில் எயினர், பகழி
மாய்க்கும் கவலைத்து என்ப,
அவர்தேர் சென்ற ஆறே'
(குறு.12:1- 4)
(7) மயக்கம் - confusion
'தூறுஅதர் பட்ட ஆறு மயங்கு
அருஞ்சுரம்' (கலி.5:3)
அதர்
(8) அச்சம் - fear
'கரிகாய்ந்த கவலைத்தாய்,
கல்காய்ந்த காட்டகம், வெரு வந்த
ஆறு என்னார்' (கலி.150:11-12)
(9) வழி - path
'அறியாமையின் நெறிதிரிந்து
ஒராஅது,ஆற்றுஎதிர்ப் படுதலும்
நோற்றதன் பயனே'
(பொரு.58-59)
(ஈ) நெறி Neri
(10) கொடுமை - cruelty
'கோட்டு மா வழங்கும் காட்டக
நெறியே' (ஐங்.282:5)
(11) அச்சம் - fear
'அஞ்சுவரு நெறியிடைத் தமியர்
செல்மார்' (அகம்.157:9)
(12) முறை - order
'அறிவுடை வேந்தன் நெறி அறிந்து
கொளினே' (புறம்.184:5)
(உ) கடம் Katam
(13) துன்பம், வறட்சி, வெம்மை -
tragic, drought, heat
'நுன்மழை தளித்தென நறுமலர்
தாஅய்த் தண்ணிய ஆயினும்,
வெய்யமன்ற - மடவரல்
இன்துணை ஒழியக் கடம் முதிர்
சோலைய காடு இறந்தோர்க்கே'
(ஐங்.328)
(ஊ) அத்தம் Attam
(14) வறட்சி - drought
'நீர் நசைக்கு ஊக்கிய உயவல்
யானை இயம் புணர் தூம்பின்
உயிர்க்கும் அத்தம்'(ஐங்.377:1-2)
(15) மயக்கம் / குழப்பம் - confusion
'நெறி மயக்குற்ற நிரம்பா நீடு
அத்தம்'(கலி.12:7)
(16) கொடுமை, பாதுகாப்பின்மை -
horrid,unsafe
'வாள்கண் வானத்து என்றூழ்
நீள்இடை, ஆள்கொல் யானை
அதர்பார்த்து அல்கும் சோலை
அத்தம் மாலைப் போகி'
(அகம்.325:18-20)
(எ) வழி Vali
(17) மயக்கம், மருட்சி - confusion,
perplexity