ஆவி
ஆவி Avi (vapour)
(1) நிலையாமை, அழிவு
transitoriness, destruction
'எள் அற இயற்றிய நிழல் காண்
மண்டிலத்து உள் ஊது ஆவியின்
பைப்பய நுணுகி, மதுகை மாய்தல்
வேண்டும்' (அகம்.71:13-15)
(2) நுண்மை, வெண்மை, மென்மை
minute,white, soft
'ஆவி நுண்துகில் யாப்புறுத்
தாயினும் சாவது உறுதியான்
தப்பிய பின்றை' (பெருங்.உஞ்.36:
64-64)
(3) மெல்லிய தன்மை
'பானீர் நெடுங்கடல் பனிநாள்
எழுந்த மேனீர் ஆவியின் மெல்லி
தாகிய' (பெருங்.இலா.7:154-155)
ஆவிரை Avirai (a flower)
(1) அழிவு / நிலையாமை
destruction / transitoriness
'பொன்நேர் ஆவிரை புதுமலர்
மிடைந்த பல்நூல் மாலைப்
பனைபடு கலிமா' (குறு.173:1-2)
(2) அழகு, காமம் - beautiful,
passion
'அணி அலங்கு ஆவிரைப் பூவோடு
எருக்கின்பிணையல் அம் கண்ணி,
மிலைந்து,மணி ஆர்ப்ப, ஓங்கு
பெரும் பெண்ணை மடல் ஊர்ந்து'
(கலி.139:8-10)
ஆழி Ali (wheel)
(1) வலிமை - strength
'வள் வாய் ஆழி உள் வாய்
தோயினும்' (நற்.78:8)
(2) ஆட்சி / ஆளுமை - reign/rule
'ஆழி முதல்வ !' (பரி.2:19)
(3) அறம் - virtue
'அற ஆழி அந்தணன்' (குறள்.8)
(4) அருள் - grace
'ஓரருள் ஆழியை உலகுடை
ஒருவனை' (சூளா.216:2)
(5) வருத்துதல் - affliction
ஆழி
'பகை அணங்காழியும் பால்வெண்
சங்கமும்' (சிலப்.11:47)
(6) வெற்றி
'வடிவார் சோதி வலத்துறையும்
சுடர் ஆழியும் பல்லாண்டு'
(நாலா.2:5-6)
(7) ஒளி, ஆளுகை - light,reign
ஆழி திகழ் திருச்சக்கர'தீ யிற்
பொலிகின்ற செஞ்சுடர் த்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு
நின்று குடி குடி
ஆட்செய்கின்றோம்' (நாலா.7:1-4)
(8) விறல், வெற்றி
'வென்றி மிகு நரகன் உரம் அது
அழிய விசிறும் விறல் ஆழித்
தடக் கையன்' (நாலா.1239:1-2)
(ஆ) திகிரி - Tikiri
(9) அறம் - virtue
'அறந் தெரி திகிரிக்கு வழியடை
ஆகும்' (பதி.22:4)
(10) வெற்றி - victory
'வலம் படு திகிரி வாய் நீ வுதியே'
(கலி.7:14)
(11) சுழற்சி , மனமயக்கம்
'இருவர் நெஞ்சமும் இடைவிடல்
இன்றித் திரிதரல் ஓயாது
திகிரியில் சுழல' (பெருங்.உஞ்.33)
199-200)
(12) குற்றமின்மை
'மறுவற உணர்ந்தனை மலமறு
திகிரியை' (சீவக.2563:1)
(இ) நேமி Nemi
(13) நிழல் /பாதுகாப்பு - shade/safety
'தாமரைப் பொருட்டு நின்நேமி
நிழலே !' (பரி.3:94)
(14) இறைத்தன்மை / அருள் -
divinity/grace
'தண் அளி கொண்ட அணங்குடை
நேமி மால் !' (பரி.13:6)
(15) வெற்றி - victory
'வலம்புரி வய நேமியவை'
(பரி.15:59)
(16) புகழ் - fame
'பொரு முரண் மேம்பட்ட பொலம்
புனை புகழ் நேமி' (கலி.104:9)
(17) காலம்
'வடம் கலந்த மாலை மார்ப கால
நேமி காலனே'(நாலா.789:7)