பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 தமிழில் அறிவியல் செல்வம் நாடுகளில் அரண்மனையின் அநதப்புரத்தில் சேவகம் செய்வதற்காக ஆண்களிடம் இம்முறை கையாளப் பெறுகின்றது. ஒரு காலத்தில் இத்தாலி நாட்டில் மாதாக் கோயில் பாடகர் குழு அமைப்பதற்காகச் செய்யப் பெற்றது இடைக்காலத்தில் (Middle Ages) Louis a sangorg5#5smm.si. இச்செயல் குறைந்த கட்டணத்தில் செய்யப்பெறும் என்ற விளம்பரப் பலகைகள் தொங்குமாம்! இரஷ்யாவில் ஒரு சமூகத்தினரிடம் இச்செயல் சமயச் சடங்குகளின் ஒருபகுதியாக இருந்து வந்ததாகக் கூறப்பெறுகின்றது. பொதுவாக இனகோளங்களை இழந்த ஒரு பையனிடம் இடைநிலைப் பாலறிகுறிகள் தோன்றுவதில்லை; அவன் ஒர் அவியாகவே காணப்பெறுவான். முகத்தில் தாடியின்றி மெல்லிய குரலுடன், கொழுத்த உடலுடன் அவன் காணப்பெறுவான் அவனது பிறப்புறுப்புகள் வளர்ச்சியின்றி இருக்கும். புணர்ச்சித் துடிப்புகளும் அவனிடம் முழுநிலையில் எழும்புவதில்லை; பாண்டவர்களின் ஒராண்டுக் கரந்துறை வாழ்க்கையில் பார்த்தன் பேடியாக விராடன் அரண்மலையில் அந்தப்புரத்தில் பணி செய்ததை ஈண்டு நினைவு கூரலாம்? விரகறிபருவத்திற்குப் பிறகு விரைகளை நீக்கினால் தோன்றிய இடைநிலைப் பாலறிகுறிகள் முழுவதும் மறைவதில்லை. ஆனால், வளர்ச்சியில் மாற்றம், கொழுப்பு பெருகுதல், மனநிலை, உள்ளக்கிளர்ச்சி நிலையில் மாற்றங்கள் ஆகிய பல்வேறு மாற்றங்கள் தலைக்காட்டத்தான் செய்யும். நீண்ட காலத்திற்குப் புணர்ச்சி விருப்பமும், புணர்சசித் திறனும் அப்படியே இருக்கும். ஆனால் சிலரிடம் அவை அதிகமாகக் குறையலாம்; அல்லது. முற்றிலுமே மறைந்து விடலாம். 9. பார்த்தன் இந்திரன் அழைப்பின்பேரில் அமரர் உலகம் சென்றிருந்தபொழுது ஊர்வசி இவன்மீது காலலுற்றாள். பார்த்தன் அவள் தனக்குத் தாய்நிலையில் இருப்பதாக் கூறி மறுக்கவே, அவள் பேடிநிலையை எய்தத் கடவது என்று சாபமிட்டதாக வரலாறு. இதனை ஓராண்டுக் காலம் அவன் வேண்டும்போது பெறலாம் என்று மாற்றம் செய்யப்பெற்றது.