பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் r- 459 ஆனால், ஒர் உயரமான வெள்ளையர் இனத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் ஒரு குட்டையான கறுப்பர் இனத்தைச் சார்ந்த பெண்ணுடன் கலவி புரிந்து ஒரு சாதாரணக் குழவியைப் பிறப்பிக்கலாம். இக் குழந்தை சற்றுப் பெரிதாக அமைவதால் பிரசவம் சற்றுச் சிரமமானதாகவே இருக்கும். இங்ங்ணம் ஒரே இனத்தைச் சேர்ந்த பெரிய உருவமுடைய மனிதரும் சிறிய உருவமுடைய பெண்ணும் இணைவதால் ஏற்படும் பிரசவம் சிசேரியன் அறுவை முறையை மேற்கொள்ள வேண்டி வரும் என்பது ஈண்டு அறியத்தக்கது. ஓர் உண்மை : இவ்விடத்தில் ஒர் உண்மையை நாம் மனத்தில் இருத்த வேண்டும். மானிட இனம் முழுவதும் ஒரே இனத்தைச் சார்ந்தது. ஆகவே, கருநிறப் பெண்ணுக்கும் வெண்ணிற ஆணுக்கும் பிறக்கும். குழவிகள் யாவும் மலடற்று இருக்கும். இவை யாவும் பிறப்பொக்கும் கோழியும் வாத்தும் நாயும் பூனையும் வெவ்வேறு இனத்தைச் சார்ந்தவையாதலின் அவற்றின் கலவியினால் சந்ததியே தோன்றாமல் போயினும் போகலாம். அப்படித் தோன்றினும் (எ.டு. குதிரை, கழுத்ை) அச்சந்ததி மலடாகவே இருக்கும் என்பது அறியத்தக்கது. பூசுரர் புணர்ந்து புலைச்சியர் ஈன்ற புத்திர ராயினோர் பூசுரர் அல்லரோ? பெற்றமும் எருமையும் பேதமாய்த் தோன்றல்போல் மாந்தரிற் பேதமாம் வடிவெவர் கண்டுளார்? வாழ்நாள் உறுப்புமெய் வண்ணமோ டறிவினால் வேற்றுமை யாவதும் வெளிப்பட லன்றே" என்ற கபிலரகவல் பகுதி இக்கருத்தினை வலியுறுத்தல் காணலாம். கருணாநிதி அரசு ஒரே வகையான இல்லங்களை ஒரே இடத்தில் அமைத்து மக்களைக் குடியேற்றி சத்துவபுரம் காண்கின்றது. ஒரே வகை இனத்தைச் சார்ந்து, சாதி வேற்றுமைக் கொடுமையால் சீர்குலைந்திருக்கும் மானிட இனத்தில் சமத்துவகுலம் காணும் நாள் எந்நாளே! 9. கபிலரகவல் - அடிகள் (78-83.