பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 19% (ப் புற்று நோய் விளைவிக்கும் ஜீன் : ஒரு சில அறிஞர்கள் ஆராய்ச்சிக்கு வசதியும் வாய்ப்பும் சுதந்திரமும் வேண்டும் என்று குறிப்பிட்டனர். இந்தியாவில் பிறந்து கனடாவில் (ஒட்டவா) அறிவியல் ஆய்வுப் பணியிலுள்ள டாக்டர் சரண் ஏ. நாரங்க் என்பார். துள்ளிக்குதிக்கும் ஜீனை ஒரு சோதனைக் குழலில் செயற்கை முறையில் தயாரித்தவர். இவர் இந்த ஜீன் புற்றுநோய் விளைவிக்கும் ஜீன்களைப் பற்றிய தெளிவான உண்மை காண்பதில் கொண்டு செலுத்தும் என்று விளக்கினார். இவர் மானிட ஜீன் ஒன்றையும் செயற்கை முறையில் தயாரித்தவர். இஃது இன்சுலின் சாரத்தை விளைவிக்க உதவுவது. தான் ஒட்டாவாவில் செய்து முடித்த ஆய்வை இந்தியாவில் செய்திருத்தால் அமெரிக்காவில் தாம் எடுத்துக் கொண்ட காலத்தில் பாதியில் முடித்திருக்கலாம் என்று குறிப்பிட்டார். ஆனால் இது தமக்குச் சுதந்திரம் அளித்துத் தம் பணியில் அதிகார வர்க்கம் குறுக்கிடாதிருந்தால்தான் இது சாத்தியமாகும் என்றும், அப்பெழுதுதான் தாம் காணும் அறிவியல் கனவை நனவாக்க முடியும் என்றும் விளக்கினார். இங்கு ஆய்வுப் பணிக்குரிய நிலைமைகள் சரியாக இல்லாமையால்தான் சுமார் இருப்பத்தைந்து ஆண்டுகட்டு முன்னர் தாம் இந்தியாவை விட்டு அமெரிக்காவுக்குப் போக நேரிட்டது என்றும் கூறினார். (i) இருவித மூட்டைப் பூச்சிகள் : இன்னோர் இந்தியக் கால்வழி ஆராய்ச்சி அறிஞர் ஆனந்தமோகன் சக்ரவர்த்தி என்ற இளைஞர் கல்கத்தாவில் பயின்று உயிரியல் - வேதியியலில் Bio_Chemistrg) எம்.எஸ்.சி. பட்டமும் (1966) பேராசிரியர் சைலேஷ்ராய் அவர்களின் கீழ் ஆய்ந்து உயிரியல் - வேதியியலின் (Pseudornonous biochemistry) sega ili fansi -7+1-i Lji i tipi (1965) பெற்றார். இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் டாக்டர் மேல் பட்டத்திற்குமேல் ஆய்வகத்திற்கு உதவிப் பொருள் ஏற்பாடு (Felloயship) பெற்று ஆய்ந்தார். பின்னர் அங்கு மின் பொருள் வணிக நிறுவனம் ஒன்றில் அறிவியல் வல்லுநராகப் பணியாற்றி (1971-79) தற்சமயம் சிகாகோவிலுள்ள இல்லினாய்ஸ்