பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் *93 tti) மலட்டுப் பெண் - செயற்கை முறையில் கருத்தரிப்பு : 'மலடிவயிற்றில் ஒரு மகன் போலே, புதையல் எடுத்த ஒருதனம் போலே என்பவை ஒரு திருப்புகழ் அடிகள். 'புதையலில் ஒரு தனம் கிடைத்தல் நடைபெறக் கூடியது; சிலருக்குக் கிடைத்ததாகவும் தகவல் உள்ளது. மலடிக்கு மகன் பிறத்தல் என்று சொல்லளவில்தான் இருந்து வந்தது. இன்றைய அறிவியல் இதனையும் செய்வித்துக் காட்டி விட்டது. அமெரிக்காவில் கலிஃபோர்னிய மாநிலத்தைச் சார்ந்த இரு பெண்கள் மலடிகள் என்று மெய்ப்பிக்கப் பெற்றவர்கள். அஃதாவது இவர்கள் சூற்பைகளில் முட்டையணுக்கள் உண்டாவதில்லை. லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற மருத்துவமனையில் இவர்களிடம் கருத்தரிப்புச் செய்து வெற்றிகரமாகக் கருவுயிர்த்தலையும் நிகழ்த்தியுள்ளனர் அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள். இந்த இருபெண்களின் கணவன்மார்களின் விந்தனுக்கள் வேறு இருபெண்களின் கருப்பைக்குள் செயற்கை முறையில் செலுத்தப் பெற்றது. இதனால் அந்தப் பெண்கள் கருவுற்றனர். அந்தப் பெண்களின் கருப்பையில் வளர்ந்து வந்த கருக்கள் வெளியே எடுக்கப்பெற்று இந்த மலட்டுப் பெண்களின் கருப்பைக்குள் பொருத்தப்பெற்றன. இந்தப் பெண்களின் வயிற்றில் கருக்கள் வளர்ந்தன. உரிய காலத்தில் அவர்கள் மகப்பேறும் அடைந்தனர்.” இந்த உத்தியில் வெற்றிகண்ட அறிவியலறிஞர்கள் மேதைகளின் விந்தனுக்களைச் சேகரித்து சேம நிதியாகப் பாதுகாக்கலாம் என்ற வழியைச் சிந்திக்கின்றனர். தலை நகரில் 20. பலராமன் பிறப்பு : கம்சனுக்குக்குப் பயந்து ஏழாவது முறை தேவகி கருவுற்றபோது அந்தக் கருவில் வளர்ந்து பிறக்கும் குழவியைக் கம்சனிடமிருந்து தப்புவிக்க வேண்டும் என்பது எம்பெருமான் திருவுள்ளம். ஆகவே அந்தக் கரு வசுதேவனின் மற்றொரு மனைவியாகிய ரோகினியின் கருப்பைக்கு மாற்றப்பட்டுப் பலராமனாகப் பிறந்தது. இவனே கண்ணனுக்கு மூத்த பலராமன் சங்க இலக்கியங்களில் நம்பி மூத்தபிரான் என்று குறிப்பிடப்பெறுபவன். இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பு புதியது புனையும் ஆற்றல் புராணத்தில் கதைபோல் அடங்கிக் கிடக்கின்றது.