பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#38 தமிழில் அறிவியல் செல்வம் (கி புதிய இனிப்புப் பொருள் சருக்கரை உற்பத்தி செய்யும் நாடுகளின்மீது ஒரு பேரிடி விழுந்துள்ளது. அமெரிக்காவில் நுரைப் புளியத்தின் துணைகொண்டு உயர்ந்த ஒரு சருக்கரைக் கதிர்மணித் தேம்பாகுவை (Higistructureconsurp) தாம் தயாரிக்கும் கோகோ கோலா கோகா பெப்ஸி என்ற பானங்களின் தாயரிப்பாளர்கள் தம் பானங்களில் பயன்படுத்தப் போகும் திட்டத்தை அறிவிப்பு செய்ததால் ஏற்பட்ட விளைவு இது. தானுமேஷன் (Tanயாation) என்ற தீவிர பன இனிப்புப் பொருள் முதலில் மேற்கு ஆஃபிரிக்க நாட்டின் ஒரு கானகக் கனியினின்றும் எடுக்கப் பெற்றது. இப்போது இஃது அமெரிக்காவில் நுண்மங்களைக் (Bacteria) கொண்டு உற்பத்திச் செய்யப் பெறுகின்றது. இது சருக்கரையைவிட 2500 மடங்கு இனிப்புடையது (சாக்கரினும் இத்தகையதே இரு சருக்கரையைவிட 400 மடங்கு இனிப்புடையது என்பது நினைவு கூரத்தக்கது.) பல நாடுகள் சேர்ந்து அமைத்த நிறுவனம் ஒன்று ஜெனிட்டிக் பொறியியல் முறைகளைக் கையாண்டு தென்னை பனை காய்களினின்றும் இத்தகைய இனிப்புப் பொருளை உற்பத்தி செய்கின்றது. நிறுவனத்திற்குச் சொந்தமான தோட்டப் பண்ணைகளிலிருக்கும் மரங்களின் காய்களையே இதற்குப் பயன்படுத்துகின்றது. இந்தப் பயன்கள் மூன்றாவது உலக நாடுகட்குப் போவது என்பது வேறு விஷயம் என்கின்றார் ஒருவேளாண்மை அறிவியலறிஞர். இந்தப் பயன்கள் வளர்ந்து வரும் நாடுகட்கும் கிடைக்கச் செய்தால் அது நல்லதோர் அறிகுறியாகும். கி. முன்னேற்றமடைந்த நாடுகளிலுள்ள உயிரியல் - பொறிநுட்ப வல்லுநர்கள் தாம் பயிர்கட்குநோய்களைத் தடுத்து நிறுத்துதல், உப்புநீர், வறட்சி இவற்றைத் தாங்கும் தன்மைகள் இவற்றை விளைவிக்க முடியும் என்று மெய்ப்பித்துள்ளனர். காலகத்தை (Nitrogen) நிலைநிறுத்தும் நுண்ணுயிர்களை உண்டாக்கும் முறைகளில் நுண்பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவற்றால் உழவர்கள் பெரும்பயன் அடைவர் உரத்திற்காகச் செலவிடும் தொகையும் இதனால் குறையும்.