பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXVII

என்பது தாதுப் பொருள், கருப் பொருள் (Material) ஆன உள்ளமையைக் குறிப்பதாகும், இது இறைவனுக்கு மட்டுமே உள்ளது. சிருஷ்டிகளுக்குக் கிடையாது. சிருஷ்டிகளில் வெளியாகி உள்ளது. எனவேதான், இறைவன் திருமறையில் (அத்தியாயம் 57; வசனம் 3) தன்னைப் பற்றி இவ்வாறு அறிமுகப் படுத்துகின்ருன்.

'ஆதியும் அவனே: அந்தமும் அவனே, தோற்றுவதும் அவனே: மறைந்திருப்பவனும் அவனே, அவன் சகலவற்றையும் நன்கு அறிந்தவன்'

மறைந்து கிடக்கும் கருவூலத்தை வெளியில் கொண்டு வருவ தும் மாபெரும் பணியாகும். இப்பணியினை முனைப்போடும் துணி வோடும் சகோதரர் மணவை முஸ்தபா அவர்கள் செய்துள் ளார்கள். பாராட்டுக்குரிய இப்பணியினை இனி மெருகூட்டிப் பொலிவூட்டித் தொடர்ந்திட இறைவன் நல்லருள் நல்குவாளுக!

மெளலவி எம். அப்துல பத்தாஹ் பாகவி ஜூஹ9ரி-சிஷ்தியுல் காதிரீ