தமிழில் சிறு பத்திரிகைகள்
111
நெம்புகோல் கவிதையை உங்களில் யார் பாட்ப் போகிறீர்கள்?
இருட்டு வானத்தில்
நாம்
சிவப்புப் பறவைகள்!
பூமி இருண்டிருந்த நேரத்தில்
நாம் புறப்பட்டோம்;
நமக்கு
வெளிச்சம் வேண்டியிருந்ததால்
சிவப்புச் சிறகுகளைச்
சேகரித்துக் கொண்டோம்.
இது மேத்தா கவிதையின் ஒரு பகுதியாகும்.
வானம்பாடிக் கவிஞர்களின் மற்றுமொரு இதயக் குரலாக தமிழன்பன் எழுதிய 'நாம்' மூன்றாவது இதழில் வெளி வந்தது.
‘வானத்தைக் கீறியே
வைகறைகள் பறித்தெடுப்போம் !
மோனக் குரலுக்குள்
முழங்கும் இடி விதைப்போம் !
சூரியனைக் கண்களால்
சுட்டுப் பொசுக்குவதும்
ஆர்க்கும் கடலலையை
அடக்குவதும் நமக்கியலும் !
நமது சிறகசைப்பில்
ஞால நரம்பதிரும் !
இமயப் பறவைகள் நாம் !
எரிமலையின் உள்மனம் நாம் !
அக்கினிக் காற்றிலே
இதழ் விரிக்கும் அரும்புகள் நாம் !
திக்குகளின் புதல்வர்கள் !
தேச வரம்பற்றவர்கள் !'
இப்படி ஆர்வத்தோடும் ஆற்றலுடனும், சமூக நோக்குடனும் புதுமை வேகத்தோடும், புதுக்கவிதைகள் படைக்க முன் வந்தார்கள் வானம்பாடிக் கவிஞர்கள்.