பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



20. தெறிகள்


சிறு பத்திரிகைகளுள் விசேஷமாகக் குறிப்பிடப்பட வேண்டியவற்றில் 1970 களில் பிரசுரமான 'தெறிகள்' என்பதும் ஒன்று ஆகும்.

இலக்கிய ஆர்வமும், கவிதை எழுதும் ஆற்றலும் பெற்ற உமாபதி பத்திரிகைத் துறையில் தன்னாலியன்றதைச் செய்ய ஆசைப்பட்டு, 'தெறிகள்' என்ற இதழை ஆரம்பித்தார். முதலில் விருதுநகரிலிருந்து வெளிவந்த இந்தச் சிறு பத்திரிகை பின்னர் நாகர்கோவிலிலிருந்து பிரசுரமாயிற்று.

‘கசடதபற’ மாதிரி தோற்றம் கொண்டிருந்த 'தெறிகள்' கவிதை, சிறுகதை, இலக்கியம் சம்பந்தமான கட்டுரைகளைத் தாங்கி வந்தது. ஓவியங்களிலும் அது அக்கறை காட்டியது. அட்டையில் 'மாடர்ன் ஆர்ட்' சித்திரங்கள் அச்சாயின.

‘பொதுவாக, சிறு பத்திரிகைகளில் அச்சாகி வந்த 'மாடர்ன் ஆர்ட்' ஓவியங்கள் எதைக் குறிக்கின்றன, என்ன அழகுகளை, நயங்களை அல்லது உண்மைகளை அவை சித்திரிக்கின்றன என்று விளங்கிக்கொள்ள இயலாதுதான். படங்கள் ( ஓவியம் ) என்று பெயருக்கு அவை இடம் பெறுகின்றன என்றே கூறலாம்.

இதுபற்றி 'தெறிகள்' பொருத்தமான மேற்கோள் ஒன்றை வெளியிட்டுள்ளது :

“ஓவியங்களை விளக்குவது முழுதும் நிறைவேறக்கூடியதிலை. இது கூடாது என்பேன். ஓவியத்தை விமர்சிப்பதே வேண்டாம். எவ்வளவு தேர்ந்த விமர்சனமும் அவ் ஓவியத்தை முழுதும் சொல்லிவிடக் கூடியதில்லை. இது சாத்தியமுமில்லை.”

உமாபதி தனக்கெனத் தனித்ததொரு போக்கு வகுத்துக் கொண்டி ருந்தார் என்று தோன்றியது. 'தெறிகள்' இதழ் ஒன்றில் அவர் குறித்திருப்பது இது-

"உனது இலக்கியக் கொள்கை என்ன? அல்லது இதெல்லாம் எதற்கு என்பன போன்ற கேள்விகளையெல்லாம் சந்திக்கிறபோது