பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

வல்லிக்கண்ணன்


இந்த இதழ் கிடைத்த மூன்றாம் மாதத்தில், 'அடுத்த இதழ் இன்னின்ன விஷயங்கள்' தாங்கி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வரவில்லை.

முதலாவது காலாண்டு இதழின் தரத்தோடு, மேலும் சில இதழ்கள் சிரத்தையுடன் தயாரிக்கப்பட்டு 'தெறிகள்' வந்திருக்குமானால், அது அரிய சாதனைகள் செய்திருக்கக் கூடும்; நவீன தமிழ் இலக்கியம் 'தெறிகள்' மூலம் சிறிது பசுமை ஏற்றிருக்கவும் கூடும்.