பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

167


சில மாதங்கள் வராமல் நின்று, பின் 1979-ல் சிறு அளவில் ('விகடன் சைஸ்') மீண்டும் வந்தது.

நா. காமராசன், தணிகைச்செல்வன், சிற்பி, புவியரசு, டொமினிக் ஜீவா, சத்யஜித் ரே, டைரக்டர் ருத்ரய்யா ஆகியோரது பேட்டிகளைப் பிரசுரித்தது.

சினிமாவில் ஆர்வம் காட்டியது. தரமான திரைப்படங்களை விமர்சித்து, நல்ல படங்களைப் பாராட்டி எழுதியது.

'சிகரம்' நாடகக் கலையிலும் சிறிதளவு கவனம் செலுத்தியது.

கோ. ராஜாராம் எழுதிய 'சிவப்பு நதி' என்ற கவிதை நாடகத்தை அச்சிட்டது. கோமல் சுவாமிநாதனின் மேடை நாடகங்களை விமர்சித்து எழுதியது. அவருடைய கட்டுரை ஒன்றைப் பிரசுரித்தது.

எல்லா சிறு பத்திரிகைகளுக்கும் உள்ள சிரமங்களும் பிரச்னை களும் சிகரத்துக்கும் இருந்தன. ஒழுங்காக, காலம் தவறாது வெளிவர சிரமப்பட்டு, இறுதியில் நிற்க வேண்டிய நிலை அதற்கும் ஏற்பட்டது.