பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51. இலங்கை இதழ்கள்


தமிழ்நாட்டில் தீவிரமான இலக்கிய முயற்சிகள் ஊக்கத்தோடும் உற்சாகத்துடனும் செயல்படுத்தப்பட்டு, வெற்றிநடை போடுகின்ற காலகட்டங்களில், இலங்கையிலும் அவற்றின் தாக்கம் நன்கு உணரப்படும். இலங்கையில் உள்ள இலக்கியவாதிகள் புது விழிப்புடனும் புதிய வேகத்தோடும், தமிழ்நாட்டில் நடைபெறுகிற முயற்சிகளைப் போல, அங்கும் உற்சாக முயற்சிகளில் ஈடுபடுவது வழக்கம். தமிழ்நாட்டில் ’மணிக்கொடி’ வந்து கொண்டிருந்த காலத்தில், இலங்கையில் ’ஈழகேசரி’ தோன்றி இலக்கிய மறுமலர்ச்சிக்காகப் பணிபுரிந்தது. பிறகு கிராம ஊழியன், கலா மோகினி காலத்தில் இலங்கை இளைஞர்கள் மறுமலர்ச்சி இலக்கியத்தில் ஆர்வம் காட்டினார்கள். ’மறுமலர்ச்சி’ என்றொரு சிறு பத்திரிகையை நடத்தினார்கள். கே. கணேஷ் பாரதி நடத்தினார். சரஸ்வதி நடந்து கொண்டிருந்தபோது அதை ஒட்டி ’சாந்தி’ , ’தாமரை’ வர ஆரம்பித்த காலத்தில், இலங்கை முற்போக்கு இலக்கிய வேகம் தீவிரமாகச் செயல்படலாயிற்று. டொமினிக் ஜீவா ’மல்லிகை’ யை ஆரம்பித்தார். இன்னும் எத்தனையே முற்போக்கு இலக்கியச் சிறு பத்திரிகைகள் தோன்றின, மறைந்தன.

இலங்கையில் வியாபாரம் செய்து கொண்டே இலக்கியப் புரவலராகவும் எழுத்தாளராகவும், எழுத்தாளர்களின் நண்பராகவும் வாழ்ந்த ஒட்டப்பிடாரம் ஆ. குருசுவாமி பிற்காலத்தில் என்னிடம் அடிக்கடி சொன்னது உண்டு. இந்த இலக்கியத் தாக்கங்கள், செயல் அலைகள் பற்றியும் நீங்கள் எழுத வேண்டும் என்ற முடிவுரையோடு அவர் இப் பேச்சை முடிப்பது வழக்கம்.

இலங்கையின் இலக்கியப் பத்திரிகைகள் மற்றும் புத்தக வெளியீடுகள் குறித்து விரிவாக எழுதப்பட வேண்டியது அவசியமே. ஆனால் அவ்விதம் எழுதுவதற்கு எத்தனையோ தடங்கல்கள். அங்கே வெளியான புத்தகங்கள், பத்திரிகைகள் முதலியன தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை. இது பெரிய குறைபாடு.

கிராம ஊழியன், சரஸ்வதி, எழுத்து காலங்களில் இலங்கை நண்பர்களோடு ஓரளவு தொடர்புகொள்ள முடிந்திருந்தது. பின்னர் அது