பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

வல்லிக்கண்ணன்


பழகினார். பெரும்பான்மையான வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள அவர் அங்கே உள்ள எழுத்தாளர்கள், இலக்கியங்களுடன் தொடர்பு கொண்டவர். 1984—ல் கூட பல்கேரியா போய் வந்தார். பல்கேரியக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். முல்க்ராஜ் ஆனந்த், கே. ஏ. அப்பாஸ் நாவல்களையும். அவர் தமிழாக்கியிருக்கிறார். ’கலாநேசன்’ என்ற பெயரில் அவர் கவிதைகள் எழுதினார். இப்போதும் இலங்கைவாசியாகத்தான் இருக்கிறார்.

இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர்களில் கே. கணேஷும் ஒருவர். இலங்கை இலக்கிய விமர்சகரான பேராசிரியர் கா. சிவத்தம்பி, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், ஈழத்தின் தமிழ் இலக்கிய வளர்ச்சியும் என்ற கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்—

“1946—ல் இச்சங்கம் தோன்றுவதற்குக் காரணமாயிருந்தோர் அக் காலத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்களாகவிருந்த கே. ராமநாதன், கே. கணேஷ் ஆகியோரே. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உந்துதலையும் ஆற்றுப்படுத்தலையும் அடிக்கல்லாகக் கொண்டு இந்தியாவில் கே. ஏ. அப்பாஸ் முதலியோரின் தலைமையில் தோன்றிய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்று ராமநாதனும் கணேஷம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்தனர்.”

இதே கணேஷுசும் ராமநாதனும்தான் கூட்டாசிரியர்களாக இணைந்து ‘பாரதி’ சஞ்சிகையை நடத்தினர்.

‘பாரதி’ யின் முதலாவது இதழ் 1946 ஜனவரியில் வெளிவந்தது.

அந்த இதழின் தலையங்கத்தின் சிறு பகுதி இது...

‘பாரதி அணுசக்தி யுகத்தின் சிற்பி. விஞ்ஞான முடிவுகளில் புரட்சி ஏற்படுத்திய அணுசக்தி போல் தமிழ் மொழிக்கும் புதுமைப் போக்களித்த மகாகவி பாரதியின் பெயர் தாங்கி வருகிறது இவ்விதழ். அவர் தமிழுக்குப் புது வழி காட்டியது போலவே பாரதியும் கண்டதும் காதல்கதைகள் மலிந்து விட்ட இன்றைய தமிழிலக்கியப் போக்கிற்குப் புது வழி காட்டும்...

தமிழ் தமிழுக்காகவே என்று தம் கூட்டத்திற்குள்ளேயே தமிழைச் சிறைப்படுத்திக் கொண்ட பண்டிதர்களின் இரும்புப் பிடியினின்று அதனை மீட்டு மக்கள் சொத்தாக்கினார் பாரதியார். இன்று பாரதி பரம்பரையில்