பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52. இன்னும் சில பத்திரிகைகள்


சிரமங்கள் பலவற்றை எதிர்கொள்ள நேரிட்டாலும் சிறு பத்திரிகைகள் ஆரம்பிக்கிறவர்கள் அங்கங்கே, அவ்வப்போது, உற்சாகமாகப் பத்திரிகைகளை ஆரம்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உண்மையைத் தேடுவதும், உண்மை தெரிந்து சொல்வதும் இவர்களில் பலருடைய லட்சியமாக இருக்கிறது.

இந்த ரீதியில், ‘உண்மையே நமது தோழனும் கேடயமும் ஆகும்’ என்று அறிவித்தபடி ‘புதிய மனிதன்’ தோன்றி வளர்ந்து வருகிறது.

‘மூடிய சருகுகளைப் புறந்தள்ளிவிட்டு மண்ணில் ஒரு முளை, சூரியனுக்கு முகம் காட்டுகிறது’ என்று கூறிக்கொண்டு, புதிய மனிதன் 1985 மே மாதம் பிறந்தது. ஆசிரியர் சி. மதிவாணன். சிறப்பாசிரியர் கவிஞர் இன்குலாப்.

புதிய மனிதனுடைய ’கடமைகள் குறுகிய சுவர்களை உடைத்துப் பரந்த வெளி யில் தனது கரங்களை நீட்டுவது. ஒடுக்கப்பட்ட மானுடத்தை ஆரத் தழுவுவது...

ஒரு சிலருக்கு மட்டும் இனிக்கும் கேக்குத் துண்டுகளை வழங்கும் வேலையைப் புதிய மனிதன் செய்யமாட்டான். உழைக்கும் மக்களின் பண்பாட்டுப் பசி தீர்க்கும் சமையற்காரனாகப் புதிய மனிதன் பணிபுரிய முயல்வான்.

ஆலைச் சங்குகளின் அலறலில் மலினப்பட்ட மானுட ஓலத்தை இடிகளாய் நிமிர்த்தவும்,

களத்துமேடுகளில் சிந்தப்படும் கண்ணிர்த் துளிகளைத் தீப்பொறி களாய் உயர்த்தவும்,

இளைஞர் உதடுகளை ஆக்கிரமிக்கும் ஆபாசச் சீட்டிகளை எரிக்கும் உரிமைக் கொழுந்துகளை நிறுத்தவும்,

குடும்பச் சுவர்களுக்குள் புழுங்கும் பெண்மையின் முகங்களில் சமுதாய விடுதலைத் தென்றலை எழுதவும்,