பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

87


இதைக் குறித்து 1978 ஜனவரியில் கி. ராஜநாராயணன் எழுதிய கடிதம் ரசமாக இருந்தது. 'பரந்தாமனுக்கு தலைவணங்குகிறேன். தேன் கூட்டை எத்தனை தரம் அழித்தாலும் திரும்பவும் திரும்பவும் அது கூடு கட்டித் தேன் நிரப்பும். அயராத உங்கள் செய்கை உணர்ச்சி வயப்படச் செய்கிறது என்னை. போராடுவதே வாழ்க்கை.'

பரந்தாமனின் போராட்டக் குணம் நன்கு வெளிப்படுகிறது. அவர் ஒரு பிரகடனம் போல் எழுதி வெளியிட்ட சுயசரிதைக் குறிப்பில், அது அஃக் 22-வது ஏடு என்று 1980-ல் (ஜூன்-செப்டம்பர் ) வந்தது. அதுதான் கடைசி இதழ்.

அதில் அவர் பல லினோகட், பன்வர்கட் ஓவியங்களையும் இணைத்துள்ளார். லினோகட், பன்வர்கட் உட்கட் ஆகியவைகளுக்கு உரிய விளக்கங்களும் அக்கட்டுரையில் உள்ளன.

1972 ஜூனில் தொடங்கி 1980 ஜூனில் அஃக் நின்று விடுகிறது. எட்டாண்டுகள் 22 இதழ்கள், என் பிராணனை வாங்கிக் கொண்டு பிரசுரமாயின. என்றாலும், நான் நினைத்த சர்வ நிச்சயமான ஆழத்தின் சோபையுடன் அந்த மனோகரமான முதல் அஃக் இன்னும் வெளிவரவே இல்லை. பத்தாண்டுகளும் மனசாலும் சரீரத்தாலும், சதாசர்வமும் இதையே நினைத்து, இதற்காகவே அலைந்து திரிந்திருக்கிறேன் ஒரு பைத்தியக்காரனைப் போல. என் கையிலிருந்த கடைசிச் சல்லியையும் இதற்காகவே செலவு செய்து விட்டு தற்சமயம் நான்தான் எனக்கு மீதியாக இருக்கிறேன். பாடு அதிகம், பலன் குறைவு. சாதனை என்று சொல்லமாட்டேன். காம்பீர்யமான துவக்கம் என்று சொல்லுவேன். ஒரு தூர தரிசனத்தைக் கருதி, இருபது முப்பது ஆண்டுகளானாலும் பெற முடியாத ஒன்றை இந்தப் பத்தாண்டுகளில் நான் பெற்றேன். அனுபவம். அதுதான் எனது அபரிமிதமான உபரி லாபம். நான் தூக்க நினைத்தது கோவர்த்தன கிரியை. குடிக்க நினைத்தது பாற்கடைலை. இப்படி நினைக்கவே ஒரு மனோதைரியம் வேண்டும். இது என் சுபாவம். எனக்களித்த சாகாவரம். இத்தகைய சித்த காம்பீர்யம்தான் ஒரு மனிதனை ஒரு பட்டாளமாக்குகிறது. மனிதப் பட்டாளமாய் சமுதாயத் தோடு சமரிட்டு இந்த நினைப்பைச் செயலாக்கிக் காட்டத்தான் போகிறேன். எதிர்வரும் அந்த ஒரு நாளின் சூர்யோதயம் உங்கள் எல்லாரது நேத்திரங்களையும் கூசவைக்கத்தான் போகிறது.’

த்தகைய ன்னம்பிக்கையும் னித்தன்மைகளும் கொண்ட