பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

வல்லிக்கண்ணன்


சதங்கை வாசகர்களின் அபிப்பிராயங்கள் 'எதிர்வினை' என்ற தலைப்பிலும், ஆசிரியர் அறிவிப்பு 'பாலம்' என்றும் பிரசுரமாயின.

பத்து வருடக் காலமாக நடந்து வந்த சதங்கை காலம் தவறாது ( இடையில் நின்று நின்று போகாமலும் ) மாதம்தோறும் வந்திருந்தால்-இலக்கியவாதிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்னும் தீவிரமாகவும் முழு மனசோடும் அதற்குக் கிடைத்திருந்தால்- அதன் சாதனைகள் சிறப்பாக அமைந்திருக்கக்கூடும். புதிய எழுத்தாளர்களிடையே அது பலனுள்ள தாக்கம் ஏற்படுத்தியிருக்கவும் கூடும். அதன் எழுபத்தைந்தாவது இதழ் வெளிவரவேயில்லை.