பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுப்பு நூல்கள் 127 அவற்றை அணுக முடியாது. அவற்றைத் தக்கவாறு தமிழ் வழிப்படுத்தி திருப்பாவை விளக்கம்' என்ற தலைப்பில் ஒரு பெரிய நூலை திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தாரிடம் ஒப்படைத்துள்ளேன். விரைவில் அது வெளிவரும் - அவன் அருளால். முடிவு: பல்வேறு நிகழ்ச்சிகட்காகப் பல்வேறு காலத்தில் பொறுக்கப்பெற்ற இத்தொகுப்பு நூல்களை இன்று ஒரு சேர நோக்கி நுகர வாய்ப்பு தந்தது காரைக்குடி இந்து மதாபிமான சங்கம். அதற்கு சங்கச் சான்றோர்கட்கு என் இதயங் கலந்த நன்றி. இந்த நூல்களை அருளிய தமிழ்க்கடல் இராய.சொ.வை அவர் பிறந்தநாள் விழாவில் நினைந்து மகிழ்கின்றோம். அவர் ஆற்றிய சமய-தமிழ்த் தொண்டையும் நினைந்து போற்றுகின்றோம்.