பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆய்வு நூல்கள் காரைக்குடி வாழ்வில் (1950-60 எனக்கு மூன்று பெரியார்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் கம்பன் அடிப்பொடி சா. கணேசன், சீர்திருத்தச் செம்மல் சொ. முருகப்பா, தமிழ்க்கடல் இராய. சொ. ஆகியவர்கள். மூவரும் ஆராய்ச்சி அறிவு நாட்டம் உடையவர்கள். இயல்பாகவே சிறு வயது முதற் கொண்டே ஆய்வுத் துடிப்பு உள்ள எனக்கு இவர்கள் தொடர்பால் என் ஆராய்ச்சி அறிவு வளர்வதாயிற்று இஃதுடன் இது நிற்க. தமிழ்க் கடல் இராய சொ. பற்றிய கருத்துகள் "இன்பம் எது?" என்ற நூல் ஆராய்ச்சி அறிவு என்ற கட்டுரையில் காணலாம். அவர் அதில் கூறுவது: "எதையும் ஆராய்ச்சி செய்து மெய் அறிதல் வேண்டும். ஆராய்ச்சி அறிவு மக்கட் பிறப்பினர்க்கு மிகவும் இன்றியமையாதது. பகுத்தறிவு என்பதுதான் ஆராய்ச்சி அறிவு. பகுத்தறிவு என்றால் பிரித்தறியும் அறிவு என்பது பொருள். பகுத்தல் - பிரித்தல்; ஒவ்வொரு பொருளையும் பிரித்துப் பிரித்து மெய்காண்டல். அதுவே ஆராய்ச்சி. 壶 竇 竇 தமிழ் ஆய்வுத் துறை: தமிழ்க் கடல் இராய சொ. சங்கச் சான்றோர் போன்ற பெருமிதம் மிக்கவர். சங்கப் புலவர்களைப்போல் வள்ளல்களைப் பாராட்டும் பெற்றி யுடைய்வர்; செல்வர்களை வள்ளல் படுத்தும் நோக்கம்