பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம் 6 181 பெற்றது தமிழ்க்கடல் இராய சொ.வின் புருஷகாரத்தால் தான் என்பது அனைவரும் அறிந்ததேயாகும்’ இதனை விட அவர் அடைந்த மற்றொரு சிறப்பு அவர் சுத்த சைவமானார்; புலால் உணவை அடியோடு தவிர்த்து விட்டார்! நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெரு மானென்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாக கொள்வனே." - திருமூலர் 8. நானும் என் பிஎச்.டி. ஆய்வின் காரணமாகக் கோடை விடுமுறை காலங்களில் இத்திருத்தலப் பயணத்தைக் குடும்பத்துடன் மேற்கொண்டு 101 திவ்விய தேசங்களைச் சேவித்தேன் ஆறு பயண நூல்களை வெளியிட்டுள்ளேன். அவற்றில் பெரும்பாலும் தலம்பற்றிய விவரம், பயண அநுபவம், ஆழ்வார் பாசுரங்களின் அமைந்த வைணவ தத்துவம் ஆகியவைபற்றி விவரமாக விளக்கியுள்ளேன். 9. திருமந்திரம் - 1445 ஐந்தாம் தந்திரம் - 5. சரியை.3)