பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலாசிரியரைப் பற்றி... 82 - அகவையை எட்டும் இந்த நூலாசிரியர் எம். ஏ. பி.எஸ்சி, எல்.டி வித்துவான், பிஎச்டி பட்டங்கள் பெற்றவர். ஒன்பதாண்டுகள் துறையூர் உயர்நிலைப் பள்ளி நிறுவனர் - தலைமையாசிரியராகவும் (1941 - 50), பத்து ஆண்டுகள் காரைக்குடி அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் (1950 - 60) பதினேழு ஆண்டுகள் திருப்பதி (பிறப்பு : 27-8-1916) திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை நிறுவனர் - பேராசிரியர் துறைத் தலைவராகவும் (1960 - 77) பணியாற்றி ஒய்வு பெற்றவர். 1978 ஜனவரி 14இல் சென்னையில் குடியேறி பதினைந்து மாதங்கள் (1978 பிப்பிரவரி - 1979 ஜூன்) தமிழ்க் கலைக் களஞ்சியம் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர். திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் 1986 - ஆண்டு மூன்றுமாதங்கள் மதிப்பியல் பேராசிரிய ராகவும், 1989 - மே முதல் 1990 அக்டோபர் முடிய 18 மாதங்கள், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் காஞ்சி தத்துவ மையத்தில் தகைஞராகவும் பணியாற்றி 1200 பக்கத்தில் வைணவச் செல்வம் என்ற ஒரு பெரிய ஆய்வு நூலை உருவாக்கி வழங்கியவர். முதற்பகுதி 1995-ல் 575 பக்கத்தில் வெளிவந்துள்ளது; இரண்டாவது பகுதி அச்சேறும் நிலையில் உள்ளது. 1996 பிப்பிரவரி முதல் சென்னைப் பல்கலைக்கழக தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர்.