பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்

29


10

சேர்ப்பதா? நல்ல நியாயம்? அமைச்சர் காட்டும் நல்வழியா இது? மக்கள் காட்டிய பண்பு இந்த மண்டலத்தையே உயர்த்தியது. அமைச்சரின் உள்ளம் மிக மிகச்சுருங்கிவிட்டதே. ஆட்சி நடத்து வதற்கு மக்கள் மனமுவந்தளிக்கும் ஆறிலொரு கடமையே போதும். நீர் கூறியபடி கட்டளையிடுவ தாயின் இவர்கள் வழக்கு இந்த மன்றத்திற்கே வராதே! (பின் முதலாமவரை நோக்கி) உமக்குக் குழந்தையிருக்கிறதா? ஆம். ஒரு பையன் இருக்கிறான். (இரண்டாமவரை நோக்கி) உமக்கு? ஒரே பெண் இருக்குதுங்க. பையனுக்கும் பெண்ணுக்கும் பழக்கமுண்டா?

ஆமாங்க ... இரண்டு பேரும் உயிருக்குயிராய்ப்

பழகிய வங்க.

அந்த ரெண்டு பேருக்கும் திருமணம் செய்ய விரை வில் ஏற்பாடுகள் செய்யுங்கள். என்ன இது? நாங்கள் வழக்குத் தீர்க்க வந்தால் நீங்கள் திருமண ஏற்பாடு என்கிறீர்களே! ஆம். நீங்கள் குறிப்பிட்ட புதையல் உங்கள் இரு வருக்கும் சொந்தமல்ல. அதனை காளைக்கும் கன்னிக்கும் திருமணப் பரிசாகக் கொடுத்துவிட வேண்டியதே நீதியாகும். என்ன சொல்கிறீர்கள்? நல்ல ஏற்பாடுதானுங்க. எனக்கு ஏற்கெனவே இந்த எண்ணம் உண்டு. நண்பர் ஒப்புக்கொள்வாரோ என்ற ஐயத்தினால் புேசாமல் இருந்தேன். உங்கள் தீர்ப்பு எங்களுக்கு நல்ல பாதையைக் காட்டி விட்டது. ஆண்டிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவர் தவிர, வேறு யாராலும் இவ்வளவு துணிவான ஒரு முடிவைச் செய்ய முடியாது. உங்கள் பெருமையே பெருமை. - -