32
தமிழ்ச் செல்வம்
கா : செங்கெல்லும் தேன்கரும்பும்.
சீனிவெல்லம் கற்கண்டும், பண்கலங்து விளைவிப்பார் - கிளியே பால்வார்க்கும் கைகளினால்.
&停 * மிகுந்த சுவை! மிகுந்த சுவை!...நகரச் சிறப்பு?
கா : சாவகத்தார், பாரசீகர்
ஜப்பானியர், சீனர், நேப்பாள், உரோமர், யவனர் பிறர் - கிளியே!
உவந்துவந்து வாழ்ந்ததிங்கே. க வீரம்
&#ff i கலிங்கத்தைச் சிங்களத்தைக்
கடல்சூழ்ந்த சிங்கை, ஜாவா பர்மாவை ஆண்டுவந்தார் - கிளியே! * , பார்புகழ்ந்த தமிழ் மன்னர். க : வணிகம்... கா : அகில் சந்தனம் மிளகு
. ஆணிமுத்து பவளம் மணி
வெளிநாடுகட் கனுப்பி - கிளியே!
வெகுபுகழ் பெற்றோமடி. க : அப்படியானால் நான் பேறு பெற்றவள்தான்.
கன்னியின் தந்தை : வெறும் பேறு பெற்றவள் அல்ல மகளே! நீ பெரும் பேறு பெற்றவள். அன்பரே! திருமணப் பரிசாக உமது கையாலேயே அச்செல் வத்தை வழங்கி மணமக்களை வாழ்த்துங்கள்.
மற்றவர் : ஆம், செல்வத்தை வழங்கி நம் செல்வங்களை
வாழ்த்த வேண்டியதுதான்.
இருவரும் : தமிழும் அதன் இனிமையும்போல வாழுங் கள்! தமிழை வாழ்த்தி வாழுங்கள்! தமிழ் வாழுங் காலம் வரை வாழுங்கள்!