சிறப்பு
திருக்குறள்
காட்சி : 1
காடு
உறுப்பினர் : வேட்டுவக் குடியான வேடர் தலைவன், காடன், நாகன் முதலியோர். வேடர்கள் கூத்து நடைபெறுகிறது.) வேங்கை புலி, வெங்கரடி வேட்டையாடுவோம்-காங்கள்
வேலெடுத்துப் போர்புரிந்து வெற்றி காணுவோம் அலறிவரும் சிங்கத்தையும் அடித்து வீழ்த்துவோம் வில்லால் அடித்து வீழ்த்துவோம்-அதன் பிடரிமயிர் பிடித்துலுக்கிப் புரடடித் தள்ளுவோம் ாாங்கள் புரட்டித் தள்ளுவோம்-அதன் குடல் கலங்கி உடல் பதறக் குத்தி வீழ்த்துவோம்!
கையால் குத்தி வீழ்த்துதோம்
கண்ணிற்பட்ட பறவையெல்லாம் மண்ணில் 3.
விழச் செய்வோம்! நாங்கள் மண்ணில் விழச்செய்வோம் விண்ணில் தைக்கும் குறியை வைத்து வில்வித்தை கற்போம்
காங்கள் வில்வித்தை கற்போம். நாகன் : அதோ, தலைவர் வருகிறார். அமைதியாக
இருங்கள். காடன் : நாகரே! நம் தலைவர் எதற்காக இவ்வளவு
அவசரமாக வருகிறார்? நாக : காலையில் சொல்லியிருந்தார், நம் எல்லோரை,
யும் சந்திக்க வேண்டுமென்று. வந்துவிட்டார்... வேடர் தலைவர் வாழ்க!