தமிழ்ச் சொல்லாக்கம்
119
உற்று நோக்கினால் மக்கட்கும் ஏனைச் சிற்றுயிர்கட்கும் அவ்வப் போதும் உணவுப் பொருள்கள் உண்டாக்கிக் கொடுத்தலில் மரஞ் செடி கொடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் உணவுப் பொறியாகவோ (Food Machine) விளங்கா நிற்கும்.
நூல் | : | ஏன் புலால் மறுத்தல் வேண்டும்? (1930) பக்கம் - 55 |
நூலாசிரியர் | : | பண்டிதர் பாலசுந்தரம் பிள்ளை |
அழலுண் பொருள்கள் தயில சத்து (பசையு)டைப் பொருள்கள். உண்பவை - எண்ணெய், நெய் முதலியவை.
நூல் | : | சசிவன்ன போத மூலம் (1930) பக்கம் 88 |
உரையாசிரியர் | : | காஞ்சிநகர் ஆ. செங்கல்வராய முதலியார் |
(தருக்க வேதாந்த பேராசிரியர்) |
பிராணாயாமம் | - | வளிநிலை |
பிரத்யாகாரம் | - | தொகை நிலை |
தாரணை | - | பொறை நிலை |
தியானம் | - | நினைதல் |
இங்கு புலன்வினை மாறி என்றமையான், இயமம், நியமம் ஆசனம் இருப்பு), பிராணாயாமம் (வனிநிலை), பிரத்யாகாரம் (தொகை நிலை) தாரணை (பொறை நிலை), தியானம் (நினைதல்), சமாதியென்னும் எண்வகை யோகவுறுப்புக்களுள் பிரத்யாகாரம், தாரணை என்ற இரண்டையுமே யுணர்த்தினார்; இவை நனவிற் சுமுத்திக்கு முக்கிய சாதனமாதலின்.
நூல் | : | சசிவன்ன போதம் (1930) பக்கம் - 141 |
நூலாசிரியர் | : | காஞ்சி நகர் ஆ. செங்கல்வராய முதலியார் |
(தருக்க வேதாந்த போதகாசிரியர்) |
நாமும் ஏனைச் சிற்றுயிர்களும் உட்கொள்ளும் உயிர்க்காற்று உள்ளே சென்றவுடன் அழுக்காகிப் பின் வெளிப்பட்டு விடுகின்றது. அப்போது அது நச்சுக் காற்றாய் (Carbonic Acid gas) மாறி விடும். இந்நச்சுக் காற்றையே திரும்பவும் நாம் உட்கொள்வமாயின் உடனே இறக்க வேண்டுவதுதான்.