பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

33


பக்ஷி
பக்ஷி - பக்ஷமுடையது (பகஷம் - இறகு)
நூல் : குசேலோபாக்கியாநம் மூலமும் உரையும் (1904)
நூலாசிரியர் : வித்வான் - காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு
ஆறு பகை

காமம் - ஒரு பொருளின் மீது செல்லும் விருப்பம், குரோதம் - அப்பொருள் கிடையாத போதுண்டாகும் கோபம், உலோபம் - தானும் அநுபவிக்காமல் பிறர் கொடாமலிருக்கும் குணம், மோகம் - மாதர் மீதுண்டாகுமிச்சை, மதம் - செருக்கு, மாற்சரியம் - பொறாமை, இவ்வாறும் பிறவிக்கேதுவாய், ஆன்மாக்களுக்குத் துன்பம் விளைத்தலால் இவற்றை ஆறு பகை என்றார். இவற்றை வடநூலார் அரிஷட் வர்க்கம்' என்பர்.

மேற்படி நூல் : பக்கம் 105, 106
மீகான்

மீகான் - கப்பலோட்டுகிறவன். இச்சொல், மேலிடத்துள்ளானெனப் பொருள்படும். மீயான் என்பதன் மரூஉ வென்றாயினும், மீகாமன் என்பதன் விகாரமென்றாயினும், மியான் என்ற பெயர் பகுதி விகுதிகளினிடையே குச்சளியை பெற்றதென்றாயினும் கொள்க.

மேற்படி நூல் :
Parliment - பாராளுமன்று

ஒராத காட்சி பல உண்ட கண்கள் தேக்கு; மந்தப் பாராளு மன்று தனைப்
பார்த்த கண்ணோ தேக்காது.

நூல் : விவேக ரஸ வீரன் கதை (1904)
நூலாசிரியர் : பாலசுப்பிரமணிய பிள்ளை