பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

உவமைக்கவிஞர் சுரதா


Company - கூட்டம்

இங்க்லண்டிலிருந்து சில இங்க்லிஷ்காரர் வர்த்தகம் செய்யும்படி ஒரு கூட்டமாக (கம்பெனியாக) இந்தியாவுக்கு முதலில் வந்தனர். தங்கள் வர்த்தகச் சரக்குகளைப் பத்திரப்படுத்தி வைக்கும் பொருட்டு அவர்கள் பொம்பாய், கள்ளிக்கோட்டை, சென்னை, கல்கத்தா முதலான பட்டினங்களில் கொஞ்சங் கொஞ்சம் இடம் சொந்தமாகச் சம்பாதித்து, அங்கங்கே சரக்கறைகளைக் கொஞ்சம் இடம் சொந்தமாகச் சம்பாதித்து, அங்கங்கே சரக்கறைகளைக் கட்டிக் கொண்டார்கள்,

மேற்படி நூல் : ரிப்பன் ஐந்தாம் வாசக புத்தகம் (1918) பக்கம் -2
அனுசரன் ஏவற்காரன்
சந்திரசாலை நிலா முற்றம்
சாரம் பொருள், உள்ளீடு
பிரதாபம் மேன்மை
விமானம் ஏழடுக்கு வீடு
நூல் : மேகதூதக் காரிகை (1918) (காளிதாச மகாகவி)
மொழி பெயர்த்தியற்றியவர் : சுன்னாகம் அ. குமாரசுவாமிப் பிள்ளை
காவி வஸ்திரம் துவராடை
தவசிகளின் ஆசிரமம் நோன்புப்பள்ளி
இயந்திரம் பொறி
முத்திரை மோதிரம் பொறியாழி
விவாகச் சடங்கு மணவினை
நக்ஷத்திரம் விண்மீன்
நூல் : சித்தார்த்தன் (1918)
நூலாசிரியர் : அ. மாதவையர்
அருஞ் சொல் உரை : அ. மாதவையர்
ஸ்வதேச கீதங்கள் - நாட்டுப்பாட்டு
1907 - தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இந்தியா என்ற வர ஏடு உதயம். அதன் ஆசிரியரானார் பாரதியார். 'பாலபாரதம்’ என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார்.