பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. அணுவின்ஆற்றல் திரு. பெ. தங்கா சன், எம். ஏ. அணு மிகவும் சிறியது ; ஆனல் அதன் ஆற்றலோ அளவிட முடியாதது. அணுவைப் பிளக்கப் பூதம் வெளிப் பட்டது என்று வேடிக்கையாகக் கூறுவதுண்டு. இந்த அணு எத்தகையது, அதன் ஆற்றல் எத்தகையது என்று பார்ப்போம். இவ்வுலகின்கண்ணுள்ள எல்லாப் பொருள் களையும் 92 தனிப் பொருள்களாக (Elements) அடக்கி விடலாமென்றும், தனிப்பொருள்களை முறைப்படி பலவாருகச் சேர்த்து எப்பொருளையும் பெறலாமென்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். தனிப் பொருள்கள் அணுக்களால் ஆக்கப்பட்டனவென்றும், இவ் வணு க் க ள் பிரிக்கப்பட முடியாதவையென்றும் நெடுங்காலமாகக் கருதப்பட்டது. அணு பிளக்க இயலாதென்று கிரேக்க விஞ்ஞானி டெமாக்ரிடிஸ் என்பவர் சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவித்தார். 1810ஆம் ஆண்டில் டால்டன் என்ற விஞ்ஞானி எந்தத் தனிப் பொருளையும் பகுத்துக்கொண்டே சென்ருல் இறுதியில் பகுக்க முடியாத ஒரு சிறு துகள் கிடைக்குமென்றும், அத்துகளே அணு என்று விளக்கம் தந்தார். அணுக்களின் அமைப்புப்பற்றி விஞ்ஞானிகள் பலர் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தினர்கள். 1908 ஆம் ஆண்டு லார்டு ருதர்போர்டு என்னும் ஒப்பற்ற விஞ்ஞரனி அணுவைப் பற்றிய சில உண்மைகளை அறிவித்தார். அணு, பிளக்க முடியாத பொருள் அன்று என்றும், அது புரோட்டான் (Proton) எலெக்ட்ரான் (Electron) என்ற பகுதிகளால் ஆக்கப்பட்டதென்றும் கூறிஞர். அணுவின் மத்தியில் சில புரோட்டான்களும் எலெக்ட்ரான்களுமாகச் சேர்ந்து, நியூகிளியஸ் (Nucleus) என்ற உட்கரு தங்கியிருக்க, அதைச் சுற்றிப் பல எலெக்ட் ரான்கள் சுற்றிக் கொண்டேயிருக்கின்றன. சூ ரி ய னே மையமாகக்கொண்டு கிரகங்கள் யாவும் எவ்வாறு சுற்றி il

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/144&oldid=881006" இலிருந்து மீள்விக்கப்பட்டது