பக்கம்:தமிழ்த் திருமண முறை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14



போன்னு மெய்ப்பொரு, ளுந்தரு வானைப்
போக மும்திரு வும்புணர்ப் பானைப்,
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்,
பிழையெ லாம்தவி ரப்பணிப் பானை,
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மா னைஎளி வந்த பிரானை,
அன்னம் வைகும் வயல்பழ னத்தணி
ஆரூ ரானை மறக்கலு மாமே.

 
மணமகளுக்கு ஆடை வழங்குதல்

ஆசிரியர் பின்வரும் பாடலை ஓதிக்கொண்டு மணமகளுக்கு ஆடையை அளித்தல்.

தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினும்
சார்பினும் தொண்டர் தருகிலா
பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்,
இம்மை யேதரும் சோறும் கூறையும்
ஏத்த லாம் இடர் கெடலுமாம்,
அம்மை யேசிவ லோக மாள்வதற்கு
யாதும் ஐயுற வில்லையே.


5. காப்பு அணிதல்

ஒருதட்டில் பச்சரிசி, வெற்றிலை பாக்கு, மஞ்சள் பூசிய தேங்காய், பழம், மஞ்சள் கோக்கப்பட்ட இரண்டு மஞ்சள் நாண் ஆகியவற்றை வைத்தல்.

திருமணம் தடையின்றி இனிது நடைபெறும் பொருட்டுத் திருவருட்காப்பாக இந் நாணைக் கையில் கட்டுகின்றேன் என்று ஆசிரியர் சொல்லிக் கொண்டு பின்வரும் பாடலை ஓதி மணமகன் வலக்கையில் கட்டுதல்.