பக்கம்:தமிழ்த் திருமண முறை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்ட வர்க்கும் இறைவா போற்றி!
போற்றி போற்றி புயங்கப் பெருமான்!
போற்றி போற்றி புராண காரண!
போற்றி போற்றி சயசய போற்றி!

செந்தீ வளர்த்து முடிந்தபின் ஓதுதல்

இரு நிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமான னாய்எறியும் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாசமாய் அட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமும் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறருருவும் தம்முருவும் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளே யாகி
நிமிர் புன்சடை அடிகள் நின்ற வாறே.

சோதியே சுடரே சூழொளி விளக்கே
சுரிகுழல் பணைமுலை மடந்தை பாதியே பரனே பால்கொள் வெண்ணீற்றாய்
பங்கயத் தயனுமால் அறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்
நிறைமலர்க் குருந்தம் மேவியசீர்
ஆதியே யடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்ற ருளாயே.

ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே
உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரண் மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே
அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
அம்பலம் ஆடு அரங்காக
வெளிவளர் தெய்வக் கூத்து உகந்தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.