பக்கம்:தமிழ்த் திருமண முறை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
23

"கொட்ட மேகமழுங் குலாளொடு கூடினாய் எருது ஏறினாய் நுதல்
பட்டமே புனைவா யிசைபாடுவ பாரிடமா
நட்டமே நவில்வாய் மறையோர் தில்லை
நல்லவர் பிரியாத சிற்றம்பலம் இட்டமா வுறைவாயிவை மேவிய தென்னை கொலோ."


15. மணமக்கள் செந்தீ வலம் வருதல்

மணமகன் மணமகள் கையைப் பற்றிக்கொள்ளவேண்டும்.தோழன் முன்னும் தோழி பின்னும் செல்ல மணமக்கள் ஒரு முறை வலம் வந்து கிழக்கு நோக்கி நிற்றல் வேண்டும். மணமகனின் கைகளின் மேல் மணமகளின் கைகளை வைக்கச்செய்தல், மணமகளின் உடன் பிறந்தான் பொரியை மணமக்கள் கையில் இடுதல். மணமக்கள் அதைத் தம்கைகளால் மூடி வணங்கிப் பின் அதனைச் செந்தீயில் இடுதல்.

இவ்வாறு மூன்று முறை வலம் வந்து பொரியிடுதல்.அப்பொழுது பின்வரும் பாடல்களை ஓதுதல் வேண்டும்.

அகன்அமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்று
ஐம்புலனும் அடக்கி ஞானம்
புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத்
துள்ளிருக்கும் புராணர் கோயில்
தகவுடைநீர் மணித்தலத் துச்சங் குளவர்க்
கந்திகழச் சலசத் தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்டட
மணஞ் செய்யும் மிழலை யாமே.

குறிப்பு

மணமக்கள் இரண்டாம் முறை வலம் வந்தவுடன் மணமகன் மணமகள் கால்விரலில் மெட்டியிடுதல். மூன்றாம் முறை வலம் வந்து பொரியிட்டதும் மைத்துனர்க்கு மோதிரம் இடுதல்.