பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 தமிழ் நூல் தொகுப்புக் கலை தொகைப் பெயராகக் கீழ்க்கணக்கு என்னும் பெயர் வழக் காறு ஆளப்பட்டுள்ளமை காண்க: இன்னும், நம்பியகப்பொருள்-அகத்திணையியலில் குறிஞ்சி பாலை, என்னும் (6-ஆம்) நூற்பாவின் கீழ்-"...பத்துப் பாட் டும், கலித்தொகையும், ஐங்குறு நூறும், கீழ்க்கணக்கும், சிற்றட்டகமும் முதலாய சான்றோர் செய்யுட்கள் எல்லாம் வேண்டிய முறையானே வைத்தலானும் இவ்வாற்றான் எண் ணப்பட்டது எனக் கொள்க'. என வரையப்பட்டுள்ள பழைய உரைப்பகுதியிலும், நன்னூல்-பொதுவியல் எப்பொருள் எச் சொலின்' என்னும் (37-ஆம்) நூற்பாவின்கீழ் மயிலைநாதர் வரைந்துள்ள ஐம்பெருங் காப்பியம்’ எண் பெருந்தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என்னும் இவ்விலக்கி யங்களுள்ளும் விரிந்த உரிச்சொல் பனுவல்களுள்ளும் உரைத்த வாறு அறிந்து வழங்குக'-என்னும் உரைப் பகுதியிலும், யாப் பருங்கலக் காரிகை-ஒழியியலில் மாஞ்சீர் கலியுட் புகா என் னும் (40-ஆம்) நூற்பாவின்கீழ்க் குணசாகரர் வரைந்துள்ள “...திருவள்ளுவப் பயன், நாலடி நானுாறு முதலாகிய கீழ்க் கணக்குள்ளும் முத்தொள்ளாயிரம் முதலாகிய சான்றோர் செய்யுளுள்ளும்வஞ்சியுரிச் சீர் வந்திலாமையானும்...' என்னும் உரைப்பகுதியிலும், இன்னபிறவற்றிலும், பதினெட்டு நூல் கட்கும் பொதுவாகிய கீழ்க்கணக்கு என்னும் பெயர் வழக்காற் றைக் காணலாம். கீழ்க் கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களும் எந்தெந் தக் கோண்த்திலெல்லாம் ஒரு தொகைப்படுத்திக் காட்டப்பட் டுள்ளன என்பதை அறிவிப்பதற்காகவே ஈண்டு இவ்வளவு சான்றுகள் தரப்பட்டன. பதினெட்டு நூல்கள்: பதினெண் கீழ்க் கணக்கு என்னும் தொகுப்பைச் சேர்ந்த பதினெட்டு நூல்களும் இன்னின்னவை எனத் தெளிவுபடுத்து வதில் அறிஞர்க்கிடையே கருத்து வேறுபாடு உள்ளது. அஃதா வது,-பதினேழு நூல்களைப் பற்றிப் பெரும்பாலும் அறிஞர் களிடையே கருத்துதொற்றுமை உள்ளது; பதினெட்டாவது