பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/555

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி ற்காலம் 533 தனிப்பாடல் திரட்டு (1960) சங்கர மூர்த்திப் புலவர் பாடல் தொடங்கிப் பல புலவர் கள் பாடிய 1057 பாடல்களின் திரட்டு இது. இதுவரை வெளி வராத பாடல்கள் பல உள. தனித்தனிப் புலவர்கள், தனித் தனி மாந்தரைப் பற்றியும் வெவ்வேறு பொருள்கள் பற்றியும் வெவ்வேறு காலங்களில் பாடியவை இவை. - - பாடல்கள், தொழில் - அளவு - பாட்டு வகை - பொருள் 'முதலிய வற்றால் வேறு பட்டவை. இதில் இடம் பெற்றுள்ள ஊர்கட்கும் காலங்கட்கும் இடையீடு மிகுதி. பக்தி, அறம், புறம், இடைக் காலத்தும் பிற்காலத்தும் இருந்த அரசர்கள், அமைச்சர்கள், வள்ளல்கள், புலவர்கள், பண் டைப் பழக்க வழக்கங்கள், ஒழுக்கம், ஒன்பது சுவைகள்முதலிய பொருள்கள் பற்றிப் பாடப் பட்டுள்ளன. பாடியோரும் பாடப் பட்டோரும் காலம் - இடம் - குலம் -முதலியவற்றால் வேறு பட்டவர்கள். - - பதிப்பு: தி. சந்திதித்தரன் முன்னுரை எழுதிப் பதிப்பித்துள் அார்.-இது அரிசி வெளியீடு. தமிழ்நாடு அரசின் ஒலைச்சு வடிகையெழுத்துச் சுவடி நூலகத்தைச் (M.G.0.M.S-55) சேர்த் தது. இது. பாரதி விஜயம் பிரஸ், திருவல்லிக் கேணி, சென்னை -ஆண்டு 1960. சந்திர சேகரன் முன்னுரை நாள்: 2, 3. 60. தமிழ்நாடு ஒலைச் சுவடி-கையெழுத்துச் சுவடி நூல் நில்ையத்திலிருந்து குறிப்பெடுத்த நூல்கள் சில பின்வருமாறு:தனிப் பாடல் திரட்டு - - - பலர் பாடிய தனிக் கவிதை, துதி, சிலேடை, அச்சிடாத பல பாடல்கள், கீர்த்தனைகள் உள. த.பா.தி. பல தலைப்புகளில் பல பாடல்கள், தலைப்பில்லாத பல பாடல்கள், கனக நற்சபை வாசன்ே என்று முடியும் 9 பாடல் கள், மீனாட்சி சுந்தர நாவலர் பற்றிய பாடல், அட்ட நாக பந்தம், கமல பந்தம், இரத பந்தம், இடமணித்து என்றல்,