பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 தமிழ் நூல் தொகுப்புக் கடி பதிற்றுப் பத்தின் நூறு பாடல்களுள் முதல் இரண்டு மூன்று பாடல்களும் இறுதி யிரண்டு மூன்று பாடல்களும் சிதைந்து போயிருப்பின் இயற்கை யெனலாம்; ஆளுல், சொல்லிவைத்தாற் போல் ஒன்றுகூட நில்லாமல் முதலில் சரியாய்ப் பத்துப் பாடல்களும் இறுதியில் சரியாய்ப் பத்துப் பாடல்களும் இல்லாதுபோனது எவ்வாறு? இதிலும் வியப் பொன்றும் இல்லை. இந்த நிலைமையிலிருந்து நமக்கு விளங்குவதாவது : பதிற்றுப் பத்தின் ஒவ்வொரு பத்துக்கும் உரிய ஒலைச் சுவடிகள் தனித்தனிப் பத்தாகக் கட்டுக் கட்டி முறையே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், - "முதலும் கடையும் சிதைவது இயற்கை என்ற பொது முறைப்படி, முதல் கட்டும் இறுதிக் கட்டும் சிதைந்து போயின. சரி, கட்டாக இருந்தது எவ்வாறு காணுமற் போயிற்று? யாராவது திருடிக் கொண்டிருக்கலா மெனில், முதலேயும் கடையையும் மட்டும் திருடுவானேன்? செல்லரித்திருக்கலா மெனில், முதல் கட்டிலும் இறுதிக்கட்டிலும் ஒர் ஒலையைக் கூட மீதி வைக்கவில்லையா? அவ்வாறே நடந்திருப்பினும், எல்லாருடைய வீட்டு ஒலைச் சுவடிகளிலுமா இவ்வாறு நடந்திருக்கக்கூடும்? சிலர் வீட்டில் இப்படி நடந்திருப்பினும், வேறு சிலர் வீட்டிலாயினும் முழுதும் இருந்திருக்கக் கூடுமே! அப்படியே எல்லாருடைய விட்டிலும் செல்லரித் திருப்பினும், சிலர் வீட்டில் முன்பகுதியில் மட்டும் அரித்திருக்க வேண்டும் - வேறு சிலர் வீட்டில் பின் பகுதியில் மட்டும் அரித்திருக்க வேண்டு மல்லவா? அவ்வாறே எல்லா ருடைய வீட்டிலும் இருபுறங்களிலும் அரித்திருப்பினும், சிவர் வீட்டில் முன்பகுதியிலாவது சில பாடல்களும், சிலர் வீட்டில் பின் பகுதியிலாவது சில பாடல்களும், விட்டு வைக்கப்பட்டிருக்கலாமே! சுவடிகளிலும் முதல் பத்து முழுதும், இறுதிப் பத்து முழுதும் தொலைந்து போனது எவ்வாறு? அதிலும், தமிழ் வழங்கும் பல்வேறு. பகுதிகளிலும் இந்த நிலைமை ஏற்பட்டது எவ்வாறு? στGυ συ/Τ(ίθοδοι -ιμ - பி: - • Gరf t_i ه - به ، " தக e - இராச j சாலைப் பிரதி. ழ்வார் திருநகரி, ஜே. - - - 行 ・_争LD G55f* தே. லட்சி ன் பிரதி. - + )i, g, 65) 6nف • e அளச் சோத 56v55酶列”“波 է Զ}f!}