பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 - தமிழ் நூல் தொகுப்புக் க.ை (6) தண்டியலங்காரம் தொகை நூலுக்குக் கூறியுள்ளி' இலக்கணத்தை ஊன்றி நோக்குங்கால் ஒர் உண்மை புலப் படுகிறது. ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்” என்றபடி, இதற்குமுன் தமிழில் உள்ள தொகை நூல்களைத் தண்டியாசிரியர் நினைவில் வைத்துக்கொண்டு, இந்த இலக்கணத்தைக் கூறியுள்ளார் என்னும் உண்மைதான் அது. எனவே, பன்னிரண்டாம் நூற்ருண்டிலேயே தொகை நூலுக்கு இலக்கணம் கூறும் அளவிற்கு, முன்னமேயே தமிழில் பல்வேறுவகைத் தொகை நூல்கள் பல்கிப் பரவி யிருந்தமை புலப்படும். இவ்வாருக, தண்டியலங்காரத்தாலும் அதன் பழையச் உரைப் பகுதியாலும், நூல் தொகுப்புக் கலையைப் பற்றிய பல நுணுக்கங்கள் அறியப்படுகின்றன. இருபதாம் நூற். ருண்டில் ஐரோப்பிய - அமெரிக்கக் கலைக்களஞ்சியங்கள் கூறும் விளக்கத்தை, அன்றே ஒரு தமிழ் நூல் அறிவித் திருப்பது பெருமைக்கு உரியதாகும். இத்துணைப் பெருமைக்கு உரிய தமிழ் மொழியில், அன்று. தொட்டு இன்று வரை, நூற்றுக் கணக்கில் அன்று. ஆயிரக் கணக்கில் தொகை நூல்கள் தோன்றியுள்ளன. இந்த எண்ணிக்கை வியப்பளிக்கலாம்; ஆனால் உண்மை. இந்தத் தொகை நூல்களைப் பின்வருமாறு பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை வருமாறு:1. தனித்தனிப் பாடல் தொகுப்பு புறநானூறு, பட்டினத்தார் பாடல் முதலிய நூல்களைப் போல, தனித்தனிப் பாடல்களின் சேர்க்கையாகிய தொகை நூல்கள், இந்த முதல் பிரிவில் அடங்கும். இதிலேயே இரண்டு உட்பிரிவுகள் உள்ளன. அவை:- புறநானுாறு, அகநானுாறு முதலிய தொகை நூல்கள் பலர் பாடல்களின் தொகுப் பாகும் - இத்தகையன ஒரு வகை. இவற்றிற்குப் 'பன் மலர் மாலை" எனப் பெயர் தரலாம். அடுத்து. - பட்டினத்தார் பாடல், பாரதிதாசன் கவிதைகள் முதலிய தொகை நூல்கள். ஒருவரே பல நேரங்களில் பல பொருள்கள் பற்றிப் பாடிய தமிழ்மொழியில் நூல்தொகுப்புக் கலை 9: பாடல்களின் தொகுப்பாகும். இத்தகையன இரண்டாவது. வகை. இவற்றைத் தனி மலர் மாலே’ என வழங்கலாம். பன் மலர் மாலை என்பது, பல இன மலர் காால் தொகுக்கப் பட்டது. தனி மலர் மாலை என்பது, ஒர் இன மலர்களால் தொகுக்கப்பட்டது. 2. தனித்தனி நூல் திரட்டு ஐங்குறு நூறு, குமரகுருபரர் பிரபந்தத்திரட்டு முதலிய நூல்களைப் போல, தனித்தனி நூல்கள் பலவற்றின் சேர்க்கை யாகிய தொகைகள் - திரட்டுகள் இரண்டாம் பிரிவில் அடங்கும். இதிலும் இரண்டு உட்பிரிவுகள் உள. அவை: யாவன : - ஐங்குறுநூறு என்பது, ஒரம்போகியார் என்னும் புலவர் பாடிய நூறு பாடல்கள் கொண்ட மருதம்’ என்னும் சிறு நூலும், அம்மூவனர் பாடிய நூறு பாடல் கொண்ட 'நெய்தல்' என்னும் சிறு நூலும், கபிலர் பாடிய நூறு பாடல் கொண்ட 'குறிஞ்சி' என்னும் சிறு நூலும், ஒதலாந்தையார் பாடிய நூறு பாடல் கொண்ட "பாலை' என்னும் சிறு நூலும், பேயனர் பாடிய நூறு பாடல் கொண்ட 'முல்லை’ என்னும் சிறு நூலும் ஆகிய ஐந்து நூல்களின் திரட்டாகும். ஐங்குறு: நூறு என்னும் தொகை நூலை, ஐந்து தனித்தனி நூல்களின் திரட்டு என்று கூறுவது, சிலருக்கு - இல்லை - பலருக்குப் புதுமையாகவும் வியப்பாகவும் இருக்கலாம். ஆனால் உண்மை இதுதான். இது பின்னர்த் தனித் தலைப்பின்கீழ் ஆராயப் பெறும். எனவே, ஐங்குறு நூறு ஒரு திரட்டாகும். "பதினேராந் திருமுறை” என்னும் நூலும் இதுபோன்றதே. திருவாலவாயுடையார் முதல் நம்பியாண்டார் தம்பி ஈருக உள்ள பாவலர்கள் பன்னிருவர் இயற்றிய நாற்பது சிறுசிறு நூல்களின் திரட்டே பதினுேராந் திருமுறையாகும். பலர் நூல்களின் திரட்டாகிய இத்தகையன, திரட்டு வகைகள் இரண்டனுள் முதல் வகையாகும். இ வ. ற் றி ற் கு ப் "பன் மாலைத் திரள் எனப் பெயர் வழங்கலாம். - அடுத்து, - குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு’ என்பது, குமரகுருபர அடிகளார் இயற்றிய பல நூல்கள் சேர்ந்த ஒரு.